மதியம் வியாழன், பிப்ரவரி 28, 2008

என் இனிய சுஜாதா.....

சுஜாதா....
கணேஷ் - வசந்தில் ஈர்த்துக்கொண்டு....
விகடன் பக்கங்களில் தொழில்நுட்பமும், தமிழும், நாட்டு நடப்பும் கலந்து தந்து...
என் உலகம் விரிய அவர் ஒரு காரணம்.
புலமையை காட்ட வேண்டும் என்றில்லாமல் சாமானிய தமிழனும் படிக்கும் வகையில் எழுதியவர்....
ஓப்பன் சோர்ஸ் ஆதரவாளர்......
எதை எடுத்தாலும் வேத பெருமையுடனும், 'முன்னரே சொல்லப்பட்டது' எனும் வகையில் எழுதுவதை தவிர......
அவர் ஒரு பண்முகவாதி... கதை, கவிதை, கட்டுரை, இணையத்தமிழ், திரைவசனம், தொழில்நுட்பம் , மற்றும் பல...
சாமானிய தமிழனை அடுத்த தளத்திற்கு அழைத்துச்செல்லும் ஒரு வழிக்காட்டியை தமிழ் இழந்திருக்கிறது.....
என் இனிய சுஜாதா..... கடவுள் உண்டா இல்லையா என்று அங்கிருந்து எழுதுங்கள்.

1 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

மெய் புங்காடன்,

மிக நேர்த்தியாக கூறியிருக்கிறீர்கள், நன்றி !

எ.அ.பாலா