மதியம் வெள்ளி, மே 23, 2008

சங்க இலக்கியம் இன்று..

படைப்புப் பல படைத்துப் பலரோடு உண்ணும்
   உடைப்பெருஞ் செல்வராயினும் இடைப்படக்
குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
   இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதுர்த்தும்
   மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லை தாம்வாழும் நாளே!
                   - பிசிராந்தையார்

விளக்கம்
:
"எலாச் செல்வங்களையும் பெற்று செல்வனாக இருந்து பயனில்லை! பலரோடு விருந்துண்டு உறவாடுதலில் பயனில்லை! வீட்டில் இங்கும் அங்குமாக நடைபயிலும் குழந்தை கையை நீட்டும்; கலத்துணவை தரையில் தள்ளும். பிசைந்து வாயிலிட்டு,நெய்யுணவை உடலில் படுமாறு சிதறிவிடும். இவ்வாறு சிறுகுறும்பு செய்யும் மக்களை இல்லாதவர்க்கு வாழ்நாள் பயனற்றது,வீடு பேறும் இல்லையாம்". பாண்டியன் அறிவுடை நம்பியிடம் சென்ற பிசிராந்தையார் அரசன் சிறப்படைய இப்பாடல் வரிகளினைப் பாடினார்.

Explanation:
It is not enough; even he has all the Wealth and is a great Business magnet. His life is useless if there is no infant in his home, who will roam around spreading his little hands; to catch, to bite, and to spoil the order; and will throw the food on the floor; thus giving us coziness by performing small mischief;

P.S. This is poem is sung by Pisir-anthai-yaar at the court of Pandian King Ari-vudai Nambi. In the Sangam age (2400 years ago)

1 மறுமொழிகள்:

முனைவர் இரா.குணசீலன் said...

மிகவும் நன்றாக உள்ளது தொடர்ந்து எழுதவும் வாழ்த்துக்கள்..............