திருக்குறள் இன்று…

#######################################
நனவென ஒன்றில்லை யாயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன். (1216)
- திருவள்ளுவர்

########################################

விளக்கம்:
நனவு என்று சொல்லப்படும் ஒன்று இல்லையானால், கனவில் வருகின்ற நம் காதலர்;
நம்மை விட்டு எப்போதுமே பிரியாதிருப்பார் அல்லவோ.


Explanation:
There should be no reality, so that my lover will not be estranged from me;
And I will inseparable with my love in the Dream land forever.


P.S. Dreaming about “SECOND LIFE” (Calvin Asks :-| => if reality is not there then how come Dream will come?)

என் இனிய சுஜாதா.....

சுஜாதா....
கணேஷ் - வசந்தில் ஈர்த்துக்கொண்டு....
விகடன் பக்கங்களில் தொழில்நுட்பமும், தமிழும், நாட்டு நடப்பும் கலந்து தந்து...
என் உலகம் விரிய அவர் ஒரு காரணம்.
புலமையை காட்ட வேண்டும் என்றில்லாமல் சாமானிய தமிழனும் படிக்கும் வகையில் எழுதியவர்....
ஓப்பன் சோர்ஸ் ஆதரவாளர்......
எதை எடுத்தாலும் வேத பெருமையுடனும், 'முன்னரே சொல்லப்பட்டது' எனும் வகையில் எழுதுவதை தவிர......
அவர் ஒரு பண்முகவாதி... கதை, கவிதை, கட்டுரை, இணையத்தமிழ், திரைவசனம், தொழில்நுட்பம் , மற்றும் பல...
சாமானிய தமிழனை அடுத்த தளத்திற்கு அழைத்துச்செல்லும் ஒரு வழிக்காட்டியை தமிழ் இழந்திருக்கிறது.....
என் இனிய சுஜாதா..... கடவுள் உண்டா இல்லையா என்று அங்கிருந்து எழுதுங்கள்.

திருக்குறள் இன்று…

########################################

வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை. (512)

- திருவள்ளுவர்

#########################################


விளக்கம்:
செல்வம் வருவதற்குரிய வழிகளைப் பெருகச் செய்து, அதனால் தன்னை வளமைப் படுத்திக்கொண்டு;
மேலும் தகுந்தவற்றை ஆராய்பவனே செயலைச் செய்வானாக
.

Explanation:

Allot a work to someone who will,

• Increase the ways for acquiring wealth for the company
• Thereby increase his fortune
• And make research to find out the ways for assets attainment.

திருக்குறள் இன்று…

########################################
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு. (110)
- திருவள்ளுவர்

#########################################

விளக்கம்:
எந்ந நன்மையை அழித்தவர்க்கும் தப்புதற்கு வழி உண்டாகும்;
ஆயின், ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வே கிடையாது.



Explanation:
There is a chance to survive, even if you destroy any other good things;
But not if you don’t recognize and reciprocate the aid provided.

அந்த பார்வை...

அந்த பார்வைக்கு பொருள் என்ன?
விலக்கி போயிருக்கலாம் உன்கண்கள்
விட்டிருப்பேன் சம்மதமில்லை என்று
நிலைத்து சிலநொடிகள் பார்த்துவிட்டாய்


நெஞ்சத்தின் மையத்தில் வெடித்துகிளம்பி
மெய்யெல்லாம் பரவியது ஓர்அதிர்வு
ஒளிவெள்ளத்தில் வெளிரிநிற்க்கும் முயல்போல
உன் பார்வை தேடி பித்தனானேன்

- மெய் புங்காடன்

திருக்குறள் இன்று…

########################################
கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லெ இடம். (1123)
- திருவள்ளுவர்

#########################################

விளக்கம்:
கண்ணின் கருமணியில் உள்ள பாவையே! நீயும் போய் விடுவாயாக!
யாம் விரும்புகின்ற அழகிய நுதலை உடையாளுக்கு இருப்பதற்கான இடம் வேறு இல்லை.



Explanation:
Oh! Pupil of my eyes! You must leave!
I need an abode for my love, to stay.

தனித்திரு! விழித்திரு!

நான் அவளை பார்த்தேன்!
புதிரோ ரகசியமோ அந்தமுகத்தில்
புதிரை படித்தேன் புரியவில்லை
படித்தேன் மீண்டும் மீண்டும்!

விடை கிடைக்க காத்திருந்தேன்.....
கடந்துபோன அக்கடைசி தருணத்தில்..
கடைக்கண் காட்டிவிட்டாய்!

அம்மணித்துளி....................
நான் அவளை பார்த்தேன்
அவள் என்னை பார்த்தாள்
சொர்க்கம் என்னை பார்த்தது!

பேச துடிக்கிறேன்! பக்கமிருக்க விழைகிறேன்!
தனியே வருவாய்என நான்நிற்க,
தோழியரோடு கூடி நிற்கிறாய்!

என் வானவில்லில் மூன்றே நிறங்கள்
பச்சை, சாம்பல், வெளிர் சிவப்பு
உன் ஆடைகள்! என் வண்ணங்கள்!
உன் அசைவுகள்! என் காவியங்கள்!


என்னை ஏன் பாடாய் படுத்துகிறாய்
பதிலை எண்ணி மறுங்குவதை விடுத்து
கேள்வி கேட்பதே இங்கே கேள்விகுறி!
ஆம்என்றால் நான் இறைக்குநிகர்
இல்லை என்றால்.................

ஒரேநிமிடம் பெண்ணே! ஒரேநிமிடம்!
தனித்திருக்க மாட்டாயா? என் தவிப்பை,
புரிந்திருக்க மாட்டாயா?

இதயம் இரஞ்சுகிறது, அறிவு தவிக்கிறது
பெண்ணே புரிந்துகொள்!
தனித்திரு! விழித்திரு! என்கிறான் பாரதி
பெண்ணே புரிந்துகொள்!

- மெய் புங்காடன்

திருக்குறள் இன்று…

####################################
காலாழ் களரின் நரியடுங் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு. (500)
- திருவள்ளுவர்

####################################

விளக்கம்:
போர்க்களத்தில் வேலேந்திய வீரரையும் கோத்து எடுத்த கொம்புடைய அஞ்சாத களிற்றையும்;
அதன் கால் ஆழ்கின்ற சேற்று நிலத்தில், சிறுநரிகள் கொன்றுவிடும்.



Explanation:
An Elephant which stabs countless people in the Warfield, will be killed;
by a bevy of Jackals if it get caught in the Marshland.


P.S. Think about the field before you play, irrespective of your attitude

திருக்குறள் இன்று…

###################################
சென்ற இடத்தால் செலவிடாது தீதுஒரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு. (422)
- திருவள்ளுவர்

####################################

விளக்கம்:
மனத்தை அது சென்ற இடங்களிலேயே செல்லவிடாமல், தீமைகளிலிருந்து விலக்கி;
நன்மையில் மட்டுமே செல்ல விடுவது அறிவு ஆகும்.



Explanation:
Knowledge is the one which prevents us from falling into wrong path;
thereby guides us in the correct way.

திருக்குறள் இன்று…

####################################
அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர். (997)
- திருவள்ளுவர்
#####################################

விளக்கம்:
நன்மக்களுக்கு உரிய பண்பு இல்லாதவர்கள், அரத்தைப் போலக் கூர்மை உடையவர் என்றாலும்;
ஓரறிவேயுள்ள மரத்தைப் போன்றவர்கள் ஆவர்.


Explanation:
One who doesn’t have good cultured habits, even though they are sharp as Saw;
Is equivalent to single sensed tree.

P.S. Human are suppose to have Six senses

திருக்குறள் இன்று…

############################################
இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்கும் தகைமை யவர். (447)
- திருவள்ளுவர்
############################################

விளக்கம்:
இடித்துக் கூறித் திருத்தும் துணைவரான பெரியோரைத் துணையாகக் கொண்டவரை;
எவர்தாம் கெடுக்கக்கூடிய வல்லமை உடையவர்?


Explanation:
Nobody has great Powers enough to destroy the One;
whose has proficient people to rebuke him on his errors.

திருக்குறள் இன்று…

###########################################
வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி. (1192)
- திருவள்ளுவர்
###########################################

விளக்கம்:
தம்மை விரும்புபவருக்கு, அவரை விரும்புகிற காதலர் அளிக்கும் அன்பானது;
உயிர் வாழ்பவர்க்கு, வானம் மழை பெய்து உதவினாற் போன்றதாகும்.


Explanation:
The reciprocation of affection given to one’s lover, is equivalent to;
The life vital rain pouring to aid the people.

திருக்குறள் இன்று…

#####################################
ஆகாறு அளவிட்டி தாயினும் கேடில்லை
போகாறு அகலாக் கடை. (478)
- திருவள்ளுவர்
#####################################

விளக்கம்:
வருமானம் வருகின்ற வழியானது சிறிதாக இருந்தாலும்;
அது செலவாகிப் போகும் வழியானது விரியாதிருந்தால், அவனுக்குக் கேடில்லை.


Explanation:
Even when the path of Income is small, it’s not bad ;
Provided the expenses path is not expanding.

P.S. A rupee saved is a rupee earned.

திருக்குறள் இன்று…

#################################################
விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்.(648)
- திருவள்ளுவர்
##################################################

விளக்கம்:
கருத்தை நிரல்படக் கோத்து, இனிய முறையில் சொல்வதற்கு வல்லவர்களைப் பெற்றால்;
இவ்வுலகம் அவர்கள் ஏவியதைக் கேட்டு, விரைந்து தொழில் செய்யும்.


Explanation:
The world will get orders and promptly work for the One;
who is able to connect the ideas and articulate in a engaging manner.