நம்பியார் மறைவிற்கு வருந்துகிறோம்…

நம்பியார் மறைவிற்கு வருந்துகிறோம்…

திருக்குறள் இன்று..

#########################################
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை. (411)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம்:
கேள்வியால் அடைகின்ற அறிவே செல்வங்களுள் சிறந்த செல்வம் ஆகும்; அந்தக் கேள்விச் செல்வம் பிற செல்வங்களுள் எல்லாம் முதன்மையானதும் ஆகும்.

Explanation:
The best wealth of all the Wealth is the Knowledge gained by listening;
this is greatest wealth to be acquired.

P.S.Everybody wants to talk, but the good things occur by listening.

கம்பராமாயணம் இன்று..

எண்ணரும் நலத்தினாள் இளையள் நின்றுழி
   கண்ணொடு கண்ணினைக் கவ்வி ஒன்றையொன்று
உண்ணவும் நிலைபெறாமல் உணர்வும் ஒன்றிட
   அண்ணலும் நோக்கினான் - அவளும் நோக்கினாள்.
                     - கம்பராமாயணம்

விளக்கம்:
நினைக்க இனியவள், சிறு வயதினள் முற்றத்தில் நின்று தெருவில் செல்லும் இராமரை பார்க்க;
கண்கள் நான்கும் ஒன்றை ஒன்று கவ்விக் கொண்டு, உண்ணத்தொடங்கின;
அப்போது அலையும் தன்மை கொண்ட மனம் கூட ஒன்றியது;
அவ்வாறாக இராமரும், சீதையும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.

Explanation:
A lovable girl, in her tender age glimpses the Street from the parapet. The girl’s eye finds another pair and each of them starts to snatch each other, started eating. Even the dynamic emotions stabilized and they are united together. Thus Rama saw Sita.

P.S.
Without this incident Rama will not be able to break the bow of King Janaka (Her Sight is the secret of my energy!!).

திருக்குறள் இன்று..

#########################################
விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு. (1186)

- திருவள்ளுவர்
#########################################

விளக்கம்:
விளக்கின் முடிவை எதிர்பார்த்துத் தான் வரக்காத்திருக்கும் இருளைப் போல, என் தலைவனுடைய
தழுவலின் முடிவைப்பசலையும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது.

Explanation:
Like the darkness waiting for the end of the light, the Skin syndrome caused by
pangs of separation is waiting for the embrace of the my lover.

P.S. பசலை = பெண்களுக்கு மட்டுமே வரும் காதல் நோய்; அதனால் தோலில் உண்டாகும் நிற மாற்றம்; பெரும்பாலும் பொன்னிறமா மாறி இருக்கும்.
Pasalai = The Skin syndrome normally occurs for ladies, because of the love bug ; the skin color normally will become more like golden brown. As soon as lovers united I will disappear.
Normally disease caused if any bio-organism enters into body, but this love bug leaves thus causes the malady :)

திருக்குறள் இன்று..

#########################################
விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
படாஅதி வாழி மதி. (1210)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம்
:
நிலவே! என் உள்ளத்தில் பிரியாதிருந்து, என்னைப் பிரிந்து சென்ற காதலரை
என் கண்ணால் தேடிக் காண்பதற்காக, நீயும்வானத்தில் மறையாமல் இருப்பாயாக.

Explanation:
Oh Moon! My lover, who is nearby in the dreams, had left me.
You should prevail in the sky high and clear so that I can seek him.

P.S. Moon is symbolism for love. And even every lover-alone will share the pangs of separation with moon.

கம்பராமாயணம் இன்று..

அஞ்சிலே ஒன்று பெற்றான், அஞ்சிலே ஒன்றைத் தாவி
    அஞ்சிலே ஒன்று ஆறு ஆக, ஆர் உயிர் காக்க ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
    அஞ்சிலே ஒன்றை வைத்தான், அவன் எம்மை அளித்துக் காப்பான்
                                                              - கம்பராமாயணம்

விளக்கம்:
உலகம் ஐந்து பொருட்களால் ஆனது. மண், தண்ணீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவையே.

அனுமன் ஐந்திலே ஒன்றாகிய காற்றின் மகன். ஐந்தில் ஒன்றாகிய மண் (பூமி தேவி) பெற்ற மகள் சீதை. அவளைக் காண்பதற்காக அனுமன் ஐந்தில் ஒன்றாகிய தண்ணீரைத் (கடல்) தாவுகின்றான். ஐந்தில் ஒன்றாகிய ஆகாயத்தை வழியாகக் (ஆறு - வழி) கொண்டு இராமனின்
உயிராகிய சீதையைக் காப்பாற்றச் செல்கிறான். அங்கு சென்று ஐந்தில் ஒன்றாகிய தீயை வைத்து அரக்கரை வென்ற அனுமான் நம்மைக் காப்பான் என்று கூறும் கம்பனின் பாடலே இது.

Poem:
This is the poem from Kamba-Ramayanam (Ramayanam by Kambar). The world is made of five matters Soil, Water, Fire, Air and Ether. Here he tells about the travel trail of Anjineya.

“Child of the one of the Penta-matter(1), crosses another one penta-matter(2);
And through the other penta-matter(3) he travels, He goes to the “Soul of Rama - Sita”;
Who is a Child of a penta-matter(4), In the other city he leaves the one of the Penta-matter(5);
This man will give us and protect us.”
                                                                      - Kambar [Poet of Aprox. 13th Century]

Explanation:
1 = Air [Anjineya is the Son of Vayu, God of Air]
2 = Water [The Sea/Lake between Mainland and Mythological Island (Not the present day Lanka)]
3 = Air [He travels in “Body Airlines”]
4 = Soil [Sita – Daughter of Earth]
5 = Fire [He lit up Fire in the Mythological City in Lanka]

திருக்குறள் இன்று..

#########################################
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை. (76)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம்:
அறத்திற்கே அன்பு துணையாகும் என்று சொல்பவர் அறியாதவர். ஆராய்ந்தால் மறச் செய்கைகளுக்கும் அன்பே துணையிருக்கும்.

Explanation
:
“Charity only need affection”, says the ignorant. If you investigate;
Valor also needs love.

P.S. Rama would not be able to broke the “Siva’s Bow”, if Sita had not let her trivial sight on him.

திருக்குறள் இன்று..

#########################################
எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட விடத்து. (1285)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம்:
மை எழுதும்போது, எழுதும் கோலைக் காணாத கண்ணின் தன்மையைப்போல், என் காதலனைக் கண்டபோது, அவள்குற்றங்களையும் யான் காணாமற் போகின்றேனே.

Explanation
:
When we write, our eyes will not note the pen. Like that;
as my lover is in the vicinity, her faults has disappeared.

P.S. In Tamil we will say Ladies as “Pen”, :)--

திருக்குறள் இன்று..

#########################################
எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட விடத்து. (1285)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம்:
மை எழுதும்போது, எழுதும் கோலைக் காணாத கண்ணின் தன்மையைப்போல், என் காதலனைக் கண்டபோது, அவள்குற்றங்களையும் யான் காணாமற் போகின்றேனே.

Explanation
:
When we write, our eyes will not note the pen. Like that;
as my lover is in the vicinity, her faults has disappeared.

P.S. In Tamil we will say Ladies as “Pen”, :)--

திருக்குறள் இன்று..

#########################################
விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின். (162)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம்:
ஒருவன் எவரிடத்திலும் எப்போதும் பொறாமை இல்லாமல் இருக்கின்ற தன்மையைப் பெறுவானாயின், மேலான பேறுகளில் அதற்கு இணையாகச் சிறந்ததது எதுவும் இல்லை.

Explanation:
One who has the quality of never being jealous on anybody or anything;
that’s the great wealth incomparable to anything.

P.S. At least we should try to get rid of jealousy.

திருக்குறள் இன்று..

#########################################
நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்பாண் புனைபாவை அற்று. (407)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம்:
நுட்பமாகவும் சிறப்பாகவும் நுழைந்து கற்ற அறிவுநலம் இல்லாதவனின் உடல் அழகு, மண்ணால் அழகாகச் செய்த ஒரு பாவையின் உடல் அழகு போன்றதே.

Explanation:
One who doesn’t acquire the fine and good knowledge, even if he is fair;
is like a good hansom toy made of earthen material.

குறுந்தொகை இன்று..

சிறுவெள் ளரவின் அவ்வரிக் குருளை
     கான யானை அணங்கி யாஅங்கு
இளையள் முளைவாள் எயிற்றள்
     வளையுடைக் கையள்எம் அணங்கி யோளே.
                        - சத்திநாதனார்.

விளக்கம்
:
காட்டில் இருக்கும் கோடுடைய சிறு பாம்பை பார்த்து, சலனப்படும் யானை போல;
அரிசி பல், வளையல் கை கொண்டு வந்த இளையவளை பார்த்து மனம் மயங்குகிறது.

Explanation:
As a little white snake with lovely strips on its young body bring dilemma to the jungle elephant, this girl with her teeth like sprouts of new rice and with her wrists stacked with bangles troubles me.

Poet: Satthi Nathanar
Poem: Kurun-thogai

திருக்குறள் இன்று..

#########################################
வினைக்கண் வினையுடையான் கேன்மை வேறாக
நினைப்பான் நீங்கும் திரு. (519)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம்
:
எப்போதும் தன் தொழிலிலே முயற்சி உடையவனது நட்பினைப் பாராட்டாமல், வேறாக நினைப்பவனைவிட்டுச் செல்வம் தானும் நீங்கிவிடும்.

Explanation:
One who ever don’t appreciate the friendship of the hardworking friend;
will have his wealth leave him.

P.S. Whoever don’t respect hard work will have same attitude to his business also.

திருக்குறள் இன்று..

#########################################
நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லார் அகத்து. (194)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம்:
பயனோடு சேராத பண்பற்ற சொற்களைப் பலரோடும் சொல்லுதல், எந்த நன்மையையும் தராததோடு உள்ள நன்மையையும் போக்கிவிடும்.

Explanation:
Articulating useless and uncivilized words, which apart from doing no good ;
will also spoil whatever good left behind.

திருக்குறள் இன்று..

#########################################
தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள். (1233)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம்:
காதலரோடு கூடியிருந்த நாள்களிலே பூரித்திருந்த தோள்கள் மெலிவடைந்து, அவருடைய பிரிவைப் பிறருக்கு நன்றாகத் தெரிவிப்பவை போல் உள்ளனவே.

Explanation:
My shoulder, which are good till my lover is with me;
is becoming lean and reveal my “Malady of Separation” to the world.

சங்க இலக்கியம் இன்று..

படைப்புப் பல படைத்துப் பலரோடு உண்ணும்
   உடைப்பெருஞ் செல்வராயினும் இடைப்படக்
குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
   இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதுர்த்தும்
   மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லை தாம்வாழும் நாளே!
                   - பிசிராந்தையார்

விளக்கம்
:
"எலாச் செல்வங்களையும் பெற்று செல்வனாக இருந்து பயனில்லை! பலரோடு விருந்துண்டு உறவாடுதலில் பயனில்லை! வீட்டில் இங்கும் அங்குமாக நடைபயிலும் குழந்தை கையை நீட்டும்; கலத்துணவை தரையில் தள்ளும். பிசைந்து வாயிலிட்டு,நெய்யுணவை உடலில் படுமாறு சிதறிவிடும். இவ்வாறு சிறுகுறும்பு செய்யும் மக்களை இல்லாதவர்க்கு வாழ்நாள் பயனற்றது,வீடு பேறும் இல்லையாம்". பாண்டியன் அறிவுடை நம்பியிடம் சென்ற பிசிராந்தையார் அரசன் சிறப்படைய இப்பாடல் வரிகளினைப் பாடினார்.

Explanation:
It is not enough; even he has all the Wealth and is a great Business magnet. His life is useless if there is no infant in his home, who will roam around spreading his little hands; to catch, to bite, and to spoil the order; and will throw the food on the floor; thus giving us coziness by performing small mischief;

P.S. This is poem is sung by Pisir-anthai-yaar at the court of Pandian King Ari-vudai Nambi. In the Sangam age (2400 years ago)

திருக்குறள் இன்று..

#########################################
அனிச்சப்பூக் கால்களெயால் பெய்தாள் நுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை. (1115)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம்
:
தன் இடையின் நுண்மையை நினையாதவளாய், அனிச்ச மலரைக் காம்பு களையாமல் கூந்தலிலே சூடியுள்ளாளே;
இவளின் முறிந்துவிடும் இடைக்கு இனி பறைகள் சோகமாய் ஒலிக்கும்.

Explanation
:
She wears without any thought, the Anicham flower without removing the stalk;
now the drums will blare with sadness for her broken waist (because of the extra weight).

P.S. Anicham flower itself is very light, and the girl’s hip is so delicate that it will not able to carry the extra weight of the stem coming along with the flower. The hips will break, Wow!! What an imagination!!

விளக்கம் இன்று | மடலேறுதல்

ஒரு ஆண், ஒரு பெண் மீது உள்ள காதலை பலமுறை வெளிப்படுத்தியும், அந்தப் பெண் அவனை ஏறிட்டும் நோக்காததால், அந்த ஆண் காதலை வெளிப்படையாகச் சொல்லுமாறு உடலெங்கும் சாம்பலைப் பூசிக்கொண்டு, கிழிந்த ஆடையை உடுத்தி, பனைக்கருக்கு ஒன்றை குதிரை வடிவத்தில் செய்து, அதன் மீது ஏறிக்கொண்டு தன் நண்பர்கள் மூலம் அதைத் தெருவில் இழுத்து வரச் செய்து, ஓலையின் கீறல்களால் உடலெங்கும் காயமாகி, தெருவில் செல்கையில் அந்தப் பெண்ணை, ஊரார் காதுபட சத்தமாக ஏசி, அவள் மானத்தை வாங்கி, அதைப் பொறுக்காமலாவது அப்பெண் தன்னை மணம் புரிந்து கொள்ள சம்மதிக்கலாம் என்ற கொள்கையோடு நடந்துகொள்வதுதான் மடலேறுதல் அல்லது மடலூர்தல். அப்படியும் காதலி இசையவில்லையெனில் அடுத்த நாள் மலையேறிக் குதித்து உயிர் துறப்பான்.

Madal Eruthal, is the “Palm leaf ride” explained in the old Tamil poems. A man is in love with a girl and his proposal is rejected by her. Then he decides to say his love to the society, by procession called “Palm leaf Ride”. There he will apply ashes to his body; wear torn clothes and will take a palm branch and sit down on it. And the procession starts with the friends pulling the palm branch in her lover’s street. The procession will cause injuries by the Palm leaves, still the procession proceeds, thereby indirectly announcing to the society. This is the extreme step to take, by bringing bad name to the girl, he hope the girl will accept because of his affliction. Even then girl is not accepting his love; he will commit suicide from the rock top.

திருக்குறள் இன்று..

#########################################
செவிக்குஉணவு இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும். (412)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம்:
செவிக்கு உணவான கேள்வி இல்லாதபொழுது, உடலைக் காப்பதன் பொருட்டாக;
வயிற்றுக்கும் சிறிதளவான உணவு அறிவுள்ளவரால் தரப்படும்.

Explanation:
When there is no food for ears, then only;
think about the food for your body.

P.S. Food of thought is more vital then food we take.

காப்பி குடிச்சிருப்போம்.. இது காப்பி அடிக்கறத பத்தி..

நாங்கெல்லாம் காப்பியடிசிருக்கறோம்!! ஆங்கிலமுனா is was மாத்திப்போட்டு, கணக்குனா x அ y யாகவும்; y யை z டாகவும் மாத்திப்போட்டு ஒழுங்கா எழுதரவனை கடுப்பேத்தி நல்ல மதிப்பெண்ணையும் வாங்கி வக்கனையா சிரிச்சிருக்கோம்...

ஆனா, அது அதுக்கு ஒரு முறையிருக்கு.....

காப்பியடிச்சேனு தெரியாத அளவுக்கு காப்பியடிக்கனும்!! இயற்பியல், வேதியல கதய படிச்சிட்டு நம்ம நடையில எழுதனும், சமன்பாடு – முறைப்பாடுங்கற வெங்காயமெல்லாம் அப்படியே எழுத வேண்டியதுதான்.
கணக்கும் இரண்டு வரி கூட குறைய எழுத வேண்டியதுதான். வரலாறுனா நாளு, பேரு தவிற பிற எல்லாத்தையும் நம்ம எழுதிக்கலாம். விலங்கியல், தாவரவியல் னா படம் முக்கியம், பிற எல்லாம் நம்ம வசதிய பொருத்து. மொழி பாடத்துல கவிதை, இலக்கணம் முக்கியம்.


இதுக்கிடையில ஜெ! சொல்லற மாதிரி ஒரு குட்டி கத!!

ஒரு ஊருல, ஒரு ஈ இருந்துச்சாம் அதோட தோஸ்து செத்து போச்சு, சோகம் தாங்காம டெட் பாடிய சுத்தி சுத்தி வந்துச்சு. அது ஒரு விபத்து, தாள் திருப்பும் போது நண்பன் தாளுக்கிடையில மாட்டிக்கிட்டான். ரமேசுங்கர மனுசன பய (முள்ளம்பன்னினு கூப்புடுவாங்கன்றது ஒரு பக்கம் இருக்கட்டும்) எழுத கைய தாள் மேல வெச்சான், நன்பன் சட்னி ஆயிட்டான். சோகத்தில இருக்கற இரண்டாம் ஈ ய... ரமேச காப்பியடிச்சி எழுதர மக்கி பய புடுச்சு மொத ஈ செத்த மாதிரி தாளுல வெச்சு பத்தரம் பண்ணிட்டான்.

அந்த ஈங்க செத்தாலும் அதோட பேரு நிலச்சிருக்கும், அதாங்க நாம சொல்லுவமில்ல ‘ஈயடிச்சாங் காப்பி’.


இந்த பதிவ எழுத ஆரம்பிச்சதுக்கு காரணம் ‘சந்தோஷ் சுப்பரமணியம்’ படம் பாத்த்துதான்..
ஏமண்டி பூமில இருந்த்தால ஒரிஜனல் ‘பொம்மரில்லு’ பாத்திருக்கேன்.. ‘ஈயடிச்சாங் காப்பி’யா இருக்கும் ‘சந்தோஷ் சுப்பரமணியம்’ பாத்திட்டுதான் இந்த பதிவு. படம் வைச்சு நல்லா தெரியுனுமுனா, இங்க போங்க….

குறுந்தொகை இன்று..

இடிக்கும் கேளிர் நும் குறை ஆக
  நிறுக்கல், ஆற்றினோ நன்று மன்தில்லை
ஞாயிறு காயும் வெவ்அறை மருங்கில்
  கைஇல் ஊமன் கண்ணில் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப்
  பரந்தன்று, இந்நோய்; நோயன்று கொளற்கரிதே.

                              -வெள்ளிவீதியார்

விளக்கம்:
  பாறையின் மீது வைக்கப்பட்டிருக்கும் வெண்ணெய் சூரியனின் கதிர்களால் உருக ஆரம்பிக்கிறது. இதனைப் பார்த்துக்கொண்டிருப்பவன் கை இல்லாதவன் அத்துடன் ஊமையும் கூட;
  கைகள் இருந்திருந்தால் வேறிடத்தில் வைத்திருக்கலாம். வாய்இருந்தாலாவது யாரையாவது அழைத்துப் பாதுகாக்கலாம்.
  அதுபோல இக்காதல் நோயை அடக்கிப் பாதுகாக்கவும் இயலவில்லை. பிறரிடம் வெளியிடுவதற்குரிய மனத் திண்மையும் இல்லை.

Explanation:
  A piece of butter is placed on the rock. But due to the hot Sun the butter started melting. A man noticing the melting is dumb and has no hands.
  If he has hands he would have placed butter somewhere; if he is articulative he would have asked for some assistance. (What a pity!!)
  As such, I am neither able to control the “Love Malady”; nor able to disclose that to the world.

P.S.
வெள்ளிவீதியார் ஒரு சங்கப் பெண்பால் கவிஞர்...
Velliveethiar (Author) is a female poet of Sangam Period (2040 years back).

திருக்குறள் இன்று..

#########################################
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும். (466)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம்:
செய்யத் தகுந்தது அல்லாத ஒரு செயலைச் செய்தாலும் பொருள் கெடும்.
செய்யத்தகுந்த செயலைச் செய்யாமையாலும் கெடும்.

Explanation:
The being will be spoiled, by doing something that is not appropriate and also;
by not doing the appropriate things.

திருக்குறள் இன்று..

#########################################
செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்லரவு வாழ்வார்க் குரை. (1151)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம்:
ஓ, சேதி கூறுபவனே!! பிரிந்து செல்லாமை உண்டானால் எனக்குச் சொல்வாயாக;
பிரிந்துபோய் விரைந்து திரும்பி வருவது பற்றியானால், அது வரையிலும் வாழ்ந்திருப்பவருக்குச் சொல்வாயாக.

Explanation:
O messenger, if the news is about “my lover not departing” then you can say to me;
if the news is “lover, returning back soon”, say it to the one who will survive till then.

திருக்குறள் இன்று..

#########################################
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும். (435)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம்:
குற்றம் வரும் முன்பே, வராமல் காத்துக் கொள்ளாதவன் வாழ்க்கையானது,நெருப்பின் முன்னர் வைத்த வைக்கோல் போர் போலக் கெடும்.

Explanation:
Life of the one, who doesn’t protect him from making faults;
is like a hay stack kept near the fire.

திருக்குறள் இன்று..

#########################################
கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது. (1092)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம்:
என்னை அறியாமல் என்மேல் நோக்குகின்ற இவள் அறுகிய நோக்கமானது , காதல் உறவிலே;
சரிபாகம் ஆவதன்று , அதனிலும் மிகுதியானது ஆகும்.

Explanation:
Her small perceive on me, without my knowledge is worth;
more than half the portion of our love affair.

திருக்குறள் இன்று..

#########################################
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு. (281)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம்:
உலகினரால் இகழப்படாமல் வாழ விரும்புகிறவன் எத்தகைய பொருளையும்;
களவாடிக் கொள்ள நினையாதபடி தன் மனத்தை முதலில் காத்தல் வேண்டும்.

Explanation:
If one wants to lead a life without being reproach by others, he must;
protect his mind from the thoughts of stealing.

P.S. The thought determine the attitude in your life.

திருக்குறள் இன்று..

#########################################
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியருப்பக் காய்கவர்ந் தற்று. (100)
- திருவள்ளுவர்

#########################################

விளக்கம்:
இனிய சொற்கள் இருக்கின்றபோது ஒருவன் இன்னாத சொற்களைக் கூறுதல்;
இனிய கனி இருக்கவும் காயைத் தின்பது போன்றதே.

Explanation:
If one speaks displeasing lexis, even after having engaging words, is like;
having unripe fruit instead of ripe, sweet fruit.

திருக்குறள் இன்று..

#########################################
படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றா
காமநோய் செய்தஎன் கண். (1175)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம்:
அன்று யான் கடலிலும் பெரிதான காதல் நோயை அன்று எனக்குச் செய்த இக்கண்கள்,

அத் தீவினையால், தாமும் உறங்காமல் இவ்விரவுப் பொழுதில் துன்பத்தை அடைகின்றன.


Explanation:

These are the eyes which conferred me the Love malady, hence for such a crime;
they are distressed along with me by not resting.

திருக்குறள் இன்று..

#########################################
விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
படாஅதி வாழி மதி. (1210)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம்:
நிலவே! என் உள்ளத்தில் பிரியாதிருந்து, என்னைப் பிரிந்து சென்ற காதலரை
என் கண்ணால் தேடிக் காண்பதற்காக, நீயும்வானத்தில் மறையாமல் இருப்பாயாக.

Explanation
:
Oh Moon! My lover, who is nearby in the dreams, had left me.
You should prevail in the sky high and clear so that I can seek him.

P.S. Moon is symbolism for love. And even every lover-alone will share the pangs of separation with moon.

திருக்குறள் இன்று..

########################################
அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்கல் ஆகா அரண். (421)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம்:
இறுதிக்காலம் வரையும் காப்பாற்றும் கருவி அறிவு ஆகும்;
பகைவருக்கும் உட்புகுந்து அழிக்க இயலாத கோட்டையும் அந்த அறிவு ஆகும்.


Explanation:
The Knowledge is a device, which will take care the One till the end; It is like a fort, which foes cannot destroy, unlike any other physical things.

திருக்குறள் இன்று..

########################################
நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீர் என்று. (1320)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம்:
அவள் அழகையே நினைத்து வியந்து பார்த்தாலும், நீர் எவரையோ மனத்திற்கொண்டு;
எல்லாம் ஒப்பிட்டுப் பார்த்தீரோ என்றுகேட்டுச் சினம் கொள்வாள்.


Explanation:
Even if see her with awe, she will get fury saying that;
“you are comparing me with another one”.

P.S. Even after getting a lover you have many things lying for the future or it may be a just another reason for petite fracas.

திருக்குறள் இன்று..

#########################################
இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர். (607)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம்:
சோம்பலை விரும்பி, நல்ல முயற்சிகளைக் கைவிடுகிறவர்கள், கடுமையாகப் பிறர் இகழ்ந்து; பேசுகின்ற சொற்களைக் கேட்கின்ற நிலைமையை அடைவார்கள்.

Explanation:
One who adore indolence, and fails to take good effort will;
attain the condition of being scolded by others.

திருக்குறள் இன்று..

#########################################
செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தாரோ
எற்றென்னை உற்ற துயர். (1256)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம்
:
வெறுத்துக் கைவிட்ட காதலரின் பின் செல்லுதலை விரும்பிய நிலையிலேயே இருப்பதனால், என்னை அடைந்த இக்காமநோயானது எத்தன்மை உடையதோ.

Explanation:
The “Love disease” is a one which gives symptom like;
fondness of going behind the loathing lover.

திருக்குறள் இன்று..

########################################
நயன்ஈன்று நன்றிபயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல். (97)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம்:
பபிறர்க்கு நல்ல பயனைத் தந்து, நல்ல பண்பிலிருந்து ஒருசிறிதும் விலகாத சொற்கள்;
சொல்பவனுக்கும், நன்மை தந்து உபகாரம் செய்யும்.

Explanation:
Words which are useful to people, and don’t deviate from good will;
Will definitely add goodness and value to the articulator.

10/10 இஸ்ரோவின் உலக சாதனை..

உலகிலேயே முதல் முறையாக 10 செயற்கைக் கோள்களை ஒரே ராக்கெட்டில் ஏவி இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் (இஸ்ரோ) இன்று சாதனை படைத்தது.

ராக்கெட் ஏவப்பட்ட சிறிது நேரத்தில் அதிலிருந்து செயற்கைக் கோள்களும் வெற்றிகரமாக பிரியத் தொடங்கிவிட்டன. முதலில் கார்டோசாட், ஐஎம்எஸ் ஆகிய செயற்கைக் கோள்களை பிஎஸ்எல்வி வெற்றிகரமாக விண்ணி்ல் ரிலீஸ் செய்தது.

இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து 8 நானே செயற்கைக் கோள்களையும் பிஎஸ்எல்வி விண்ணில் செலுத்தியது.

இப்போது இந்த செயற்கைக் கோள்களை அதனதன் வட்டப் பாதைக்குக் கொண்டு செல்லும் பணியில் இஸ்ரோவின் தரைக் கட்டுப்பாட்டு மையம் தீவிரமாக உள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் சார்பில் பி.எஸ்.எல்.வி. - சி9 ராக்கெட் மூலம் ஒரே சமயத்தில், 10 செயற்கைக் கோள்களை ஏவத் திட்டமிடப்பட்டது.

அதன்படி கார்ட்டோஸாட்-2ஏ, இந்திய சிறு செயற்கைகோள் (ஐஎம்எஸ்-1) மற்றும் 8 நானோ செயற்கைகோள்கள் என்று 10 செயற்கைகோள்கள் இந்த ராக்கெட்டில் பொருத்தப்பட்டது.

8 நானோ செயற்கைகோள்களும் கனடா மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுடையது. இவை ஒவ்வொன்றும் 3 முதல் 16 கிலோ எடை கொண்டது. 8 நானோ செயற்கை கோள்களின் மொத்த எடை 50 கிலோ.

இந்தியாவின் ரிமோட் சென்சிங் செயற்கைகோள்களான கார்ட்டோஸாட்-2ஏ 690 கிலோ எடை கொண்டது. இதில் அதிநவீன பேன் கேமிரா பொருத்தப்பட்டுள்ளது.

இஸ்ரோ வடிவமைத்த (ஐஎம்எஸ்-1) இந்திய சிறு செயற்கைகோள் 83 கிலோ எடை கொண்டது. இதில் மல்டிஸ்பெக்ட்ரல் கேமரா மற்றும் ஹைபர்ஸ்பெக்டரல் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

செயற்கைக் கோள்கள் ராக்கெட்டில் பொருத்தப்பட்டு கடந்த 18ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள, சதீஷ் தவான் விண்வெளி மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.

சனிக்கிழமை கவுன்ட்டவுன் தொடங்கியது. இன்று காலை 9.23 மணிக்கு ராக்கெட் ஏவப்பட்டது. விண்வெளி மையத்தில் உள்ள 2வது ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டது.

இதையடுத்து வரிசையாக 10 சாட்டிலைட்களையும் புவி வட்டப் பாதையில் பி.எஸ்.எல்.வி. வரிசையாக ஏவியது.

இது பி.எஸ்.எல்.வி வரிசையில் 13வது பயணமாகும். உலக அளவில் ஒரே சமயத்தில் அதிக அளவிலான செயற்கைக் கோள்களை ஒரே ராக்கெட்டின் மூலம் செலுத்துவது இதுவே முதல் முறையாகும்.

இதற்கு முன்பு ரஷ்யா அதிகபட்சமாக 8 செயற்கைக் கோள்களை செலுத்தியுள்ளது. ஏரியான் 7 செயற்கைக் கோள்களை சுமந்து சென்றுள்ளது. அமெரிக்கா ஒரு நேரத்தில் அதிகபட்சமாக 4 செயற்கைக் கோள்களை மட்டுமே அனுப்புவது வழக்கம்.

உலக சாதனை:

இந்த வகையில் இஸ்ரோ உலக விண்வெளி வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளது.

ராக்கெட் செலுத்தப்பட்டதும் முதலில் கார்ட்டோஸாட்-2ஏ விண்ணில் நிலைநிறுத்தப்படும். அதன் பின்னர் ஒவ்வொரு செயற்கைக் கோளாக நிலை நிறுத்தப்படும். ஒவ்வொன்றுக்கும் அதிகபட்சம் 100 விநாடிகள் பிடிக்குமாம். அதாவது 1000 விநாடிகளுக்குள் 10 செயற்கைக் கோள்களும் விண்ணில் நிலைநிறுத்தப்படும்.

திருக்குறள் இன்று..

##################################################
நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்
காமம் நுதுப்பேம் எனல். (1148)
- திருவள்ளுவர்
##################################################

விளக்கம்:
பழிச்சொல்லால் காதலைத் தணித்துவிடுவோம் என்று முயலுதல் நெய்யால் நெருப்பை அவிப்போம்;
என்பது போன்ற அறியாமைச் செயலாகும்.

Explanation:
If one thinks that of quenching the sense of Love by rebuke, it’s a mindless job;
Like one trying to smother the fire by using the oil.

திருக்குறள் இன்று..

#########################################
காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே யுள. (527)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம்:
காக்கை உணவைக் கண்டதும் மறைக்காமல் தன் இனத்தைக் கூவி உடனிருந்தே உண்ணும், அத்தகைய இயல்பினருக்கே சுற்றப்பெருக்கமும் உண்டாகும்.

Explanation:
Crow as soon as it notice food, will call its species instead of taking for itself;
People of such nature will be always be awarded by adjoining and brimming folks.

திருக்குறள் இன்று..

#########################################
காமணிம் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்
நோனா உடம்பின் அகத்து. (1163)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம்:
பிரிவுத் துயராலே நலியும் என் உயிரையே காவடித் தண்டாகக் கொண்டு காதலும் நாணமும் இருபாலும் சம எடையாகத் தூங்குகின்றனவே.

Explanation:
My soul suffering from malady of Separation, is like a Weigh scale;
which wag between weights of love and timidity

திருக்குறள் இன்று..

#########################################
தெய்வத்தா னாகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும். (619)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம்:
தெய்வத்தின் அருளாலே கை கூடாது போனாலும், ஒருவனுடைய முயற்சியானது, தன் உடல் வருத்தத்தின் கூலியைத் தப்பாமல் தந்து விடும்.

Explanation:
Even one doesn’t have the God’s grace, one’s hard work;
will pay for his perseverance.

திருக்குறள் இன்று..

#########################################
கண்டாங் கலுழ்வ தென்கொலோ தண்டாநோய்
தாங்காட்ட யான்கண் டது. (1171)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம் :
இக்கண்கள் அவரைக் காட்டியதால் அல்லவோ நீங்காத இக்காதல்நோயை யாமும் பெற்றோம்; அவை, இன்று அவரை என்னிடம் காட்டச் சொல்லி அழுவது எதனாலோ?

Explanation :
I got the love fever because of these eyes, which had shown me my lover;
But still I can’t understand, why they are now crying for a glimpse of my lover?

திருக்குறள் இன்று..

#########################################
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து. (90)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம்:
அனிச்ச மலர் மோந்தவுடனே வாடிவிடும்:
முகம் மாறுபட்டு நோக்கிய உடனே விருந்தினரும் உள்ளம் வாடி விடுவார்கள்.

Explanation:
Aniccham is a flower which will get slump as one smell it (So Soft..). Like that;
Guest heart will wilt on seeing one’s displeasure in the face.

திருக்குறள் இன்று..

########################################
காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு
நல்லாண்மை என்னும் புணெ. (1134)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம்:
நாணத்தோடு நல்லாண்மையும் ஆகிய தோணிகளெக் காதல்நோய் என்கின்ற கடுமையான;
வெள்ளம் அடித்துக் கொண்டு போகின்றதே, என்ன செய்வேன்.

Explanation:
The floods of the love is dragging away the boats of;
shyness and gentleman manners. What can I do?.

திருக்குறள் இன்று..

########################################
அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்ன துடைத்து.(565)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம்:
எளிதாகக் காணமுடியாத தன்மையும், கமையான முகங்காட்டும் இயல்பும் உள்ளவனின் பெருஞ்செல்வம்;
பேயால் கவனித்துக் காக்கும் புதையல் போன்றதாகும்.

Explanation:
One’s wealth, whom people cannot easily see him and if seen show his face with discontent, is like;
Wealth protected and utilized by a Ghost.

திருக்குறள் இன்று..

########################################
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.(78)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம்:
உள்ளத்திலே அன்பு இல்லாதவருடைய இல்வாழ்க்கையானது;
வன்மையான பாலை நிலத்திலே காய்ந்தமரம் தளிர்த்தாற்போல் நிலையற்றதாம்.

Explanation:
Life of One who doesn’t have love in his heart, is equivalent to;
the sprouting of the tree in the tough desert, which is very momentary.

திருக்குறள் இன்று..

########################################
யாங்கண்ணிற் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா வாறு. (1140)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம்:
யாம் பட்ட இந்தப் பிரிவுத் துன்பத்தை அவர்களும் அடையாததாலேதான்;
அறிவில்லாதவர், யாம் கண்ணாற் காணும்படியாக எம் எதிரே நின்று சிரிக்கின்றனர்.


Explanation:
They don’t experience the malady of severance, consequently;
like fools, they laugh at me without any consideration.

நிறத்தை கூறி மனைவியை திட்டினால் குற்றம்

மனைவி கருப்பாக இருப்பதாக கூறி திட்டினால் அது குற்றச் செயல் என உச்சநீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு அளித்துள்ளது.

மதுரையைச் சேர்ந்தவர் பரூக் பாட்சா. இவர் 1999ம் ஆண்டு பாத்திமா என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் தனது மனைவி கருப்பாக இருப்பதைக் கூறி திட்டி வந்துள்ளார். இதனால் மனம் உடைந்த பாத்திமா, இரண்டே மாதங்களில் தற்கொலை செய்து கொண்டார்.

மரணமடைவதற்கு முன்பு அவர் கொடுத்த வாக்குமூலத்தில் தனது நிறத்தைக் கூறி கணவர் திட்டியதாக போலீஸாரிடம் தெரிவித்தார். இதையடுத்து மதுரை செஷன்ஸ் நீதிமன்றம், மனைவியை தற்கொலை செய்யத் தூண்டியதாக கூறி பரூக் பாட்சாவுக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. இதை உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. இந்த நிலையில் தீர்ப்பை எதிர்த்து பரூக் பாட்சா சார்பில் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. அதை நீதிபதிகள் அல்தாமஸ் கபீர், பன்சால் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.

விசாரணைக்குப் பின்னர் நேற்று நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், ஒரு பெண்ணின் நிறத்தையோ, அழகையோ அவமானப்படுத்தும் வகையில், கருத்துக்கள் தெரிவிப்பது, உடல் ரீதியாக செய்யும் துன்புறுத்தலை விட மோசமானது, கொடுமையானது. பெண்ணுக்கு அது மிகுந்த துன்புறுத்தலைத் தரும்.குற்றவாளியின் மனைவியை தற்கொலைக்குத் தூண்டும் அளவுக்கு மன ரீதியில் கொடுமைப்படுத்தி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே தண்டனை உறுதி செய்யப்படுகிறது என்று தீர்ப்பளித்தனர்.

இந்தத் தீர்ப்பு தேசிய அளவில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது

திருக்குறள் இன்று..

########################################
தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாம் தூது.(685)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம் :
விரிக்காமல் தொகுத்து சொல்லியும், இன்னாச் சொற்களை நீக்கியும், கேட்கும் மாற்றார் மகிழுமாறு;
சுவைப்படச் சொல்லியும், தன் நாட்டிற்கு நன்மை விளைவிப்பனே தூதன்.

Explanation:
A representative of a leader should
- Speak Short
- Remove depressing words
- Speak Sweet
- Ultimately bring vantage to the Company he belongs.

P.S. Though the Kural couplet speak about a King and his Messenger. It holds well in the Globalised Environment.

50வது இடுகை – சில நன்றி நவில்தல்..

பல ஜாம்பவான்கள் கலக்கிவரும் பதிவுலகில், சின்னப்பையனாகிய நான் 50தவது இடுகை தாண்டியதற்கு ஒரு பதிவு போடறதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான், என்ன மன்னிச்சிருங்க !! ஏதோ கொஞ்சம் எழுத ஆரம்பதித்தற்கு காரணமானவர்களுக்கு என் நன்றியை தெரிவிப்பதற்கு இந்த இடுகை தேவை.

இனி என் நன்றி பட்டியல்.....
முதலாக வள்ளுவருக்குதான் நன்றி சொல்லனும், எனக்கு வந்த எல்ல மின்னஞ்சல்களை வரிந்துகட்டி முன்னனுப்புதல் (Forward) செய்துவந்த வேளையில், மின் அஞ்சலில் வந்தது திருக்குறளும் அதன் ஆங்கில விளக்கமும். ஆங்கில விளக்கத்தை தலைக்கிழாக படித்தும் ஒன்றும் புரியவில்லை!! இது வேலையாகாது.... என்று, எனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் விளக்கம் தந்து, முன்னனுப்புதல் செய்ய ஆரம்பித்தேன். “உருப்படியா ஒரு வேல பண்ற” என்று விமர்சனம் வர !!, பல நண்பர்கள் தங்களுக்கும் முன்னனுப்புதல் செய்ய வேண்ட !!, தமிழ் தெரியாதவர்களும் ஆங்கில விளக்கத்தை வைத்து பாராட்ட !! இன்று வலைப்பதிவு வரை வர வைத்தது.

இரண்டாவதாக அருட்பெருங்கோ, கஷ்டப்படுத்தி தமிழ் எழுதி தமிழ் 99 உபயோகிக்க கற்றுகொடுத்து, பதிவுலகை அறிமுகப்படுத்தி, வலைப்பதிவை உருவாக்க உதவி செய்து; என்னை கைப்பிடித்து பதிவுலகிற்கு அழைத்து வந்தவர். மேலும் கவுஜை, குப்பி போன்ற பல முக்கிய :-) பதிவுலக சொற்களை அறிமுகப்படுத்தியவர்...
மூன்றாவதாக பதிவுலகில் விளையாடி வரும் பல பதிவர்களின் படைப்புக்கள் அதனால் எழுந்த ஆர்வம், சிலரை மொழிகிறேன்...

தமிழ்மண இணைப்பு மற்றும் தொழில்நுட்பம் பற்றி வசந்தம் ரவி, எக்காள பதிவர் TBCD, நையாண்டி லக்கிலுக்(இவரை போல நக்கல எழுதனும்...), 4 பக்கதுக்கு குறையாமல் எழுதும் உண்மை தமிழன்(‘கொடுமுடியில் ஒரு அனுபவம்’... என்னையும் என் நண்பர்களையும் வேறு உலகத்திற்கு கூட்டிச்சென்றது), வாழ்க்கை கதை கூறும் இம்சையரசி, சகப்பதிவர் வீரசுந்தர், சினி பாடல்கள் தரும் தேன்கிண்ணம், தொழில்நுட்ப பி.கே.பி, டோண்டு சார், சேதி கூறும் இட்லி வடை, தமிழ் 2000, ச்சின்னப்பையன், தமிழ் சசி, வவ்வால், பாஸ்டன் பாலா, வால் பையன் இன்னும் பலர். பெயர் விடுப்பட்டிருந்தால் என்னை மன்னியுங்கள்..

என்னை ஒரு பதிவராக ஏற்றுக்கொண்டு, பதிவுகளைப் படித்து ஊக்கப்படுத்திய எல்லா உள்ளங்களுக்கும் நன்றி.....

திருக்குறள் இன்று..

########################################
தாளாற்றித் தந்த பொருள்எல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.(212)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம் :
தன் முயற்சியினாலே ஒருவன் சேர்த்த பொருள் எல்லாம்;
"தக்கரவர்களுக்கு உதவி செய்வதற்காகவே தன்னிடம் சேர்ந்தது என்று எண்ணல் வேண்டும்.


Explanation :
If one earns wealth by effort, that wealth’s purpose is to be;
utilized for the suitable people who are deprived.

என் மூன்று தவறுகள் - சந்திரிகா குமாரதுங்கா

சந்திரிகா குமாரதுங்கா 9 ஆண்டுகள் அந்நாட்டின் அதிபராக இருந்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில் அரசியல் வாழ்க்கையில் தான் செய்த 3 குற்றங்கள் குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். அவற்றை பட்டியலிட்டும் கூறியுள்ளார்.

1. புலிகளுடன் அமைதி பேச்சு வார்த்தை மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஆட்சியை 2004ம் ஆண்டு கலைத்தது.

2. சிங்கள தீவிரவாத கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனாவுடன் தனது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டணி வைத்தது.

3. காலம் வரும்போது தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

முதல் தவறு காரணமாக அமைதிக்கான ஒரு நூலிலை வாய்ப்பும் பறிபோனது.. ரணிலும் சிங்கள அரசியல் தலைவராக நடந்தாலும். அமைதியை நோக்கி ஒரிரண்டு அடிகள் அவர் நடந்தார், என்பது சந்தேகமில்லை.

அரசியல் வெளிச்சத்தில் இல்லாத சந்திரிகாவும், நடுமேடைக்கு வரும் ஒரு முயற்சியாகவே இதை கூறுகிறார். இதில் கடைசியில் நசுக்கப்படுவது இலங்கை மக்களே!! எங்கே அமைதியோ.. அங்கே வளர்ச்சி..

திருக்குறள் இன்று..

########################################
அவாஎன்ப எல்லா உயிர்க்கும்எஞ் ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து.(361)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம்:
எல்லா உயிருக்கும் எக்காலத்திலும் பிறவி என்னும் துன்பத்தைத் தருகின்றதான வித்து;
"அவா" என்பதுதான் என்று ஆன்றோர் கூறுவர்.


Explanation:
Every life and every time, the only thing that;
gives the sorrow of Birth is one’s desire.

P.S. As per Theory every life should take 7 births before attaining salvation. If you believe such things or not the essences hold good everywhere.

பெங்களூரில் தமிழ் தியேட்டர்கள் மீது தாக்குதல்

பெங்களூர்: ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்று முதல்வர் கருணாநிதி கூறியிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரில் இன்று வன்முறை மூண்டது. தமிழ்ப் படங்கள் திரையிடப்பட்ட இரு தியேட்டர்கள் சூறையாடப்பட்டன.

ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் கன்னட அமைப்புகள், ஓகனேக்கல் கர்நாடக்ததிற்குச் சொந்தமானது என்றும் வீம்பாக பேசி வருகின்றனர்.

மேலும் ஏப்ரல் 9ம் தேதிக்குள் ஓகனேக்கல் திட்டத்தைக் கைவிட வேண்டும். இல்லாவிட்டால் தமிழக பேருந்துகளை தடுத்து நிறுத்துவோம், தமிழ்ப் படங்களை திரையிட விட மாட்டோம். தமிழ் டிவி சானல்களும் இருட்டடிப்பு செய்யப்படும் என கன்னட ரக்சன வேதிகே என்கிற கன்னட வெறியர் அமைப்பு எச்சரித்துள்ளது.

இதற்கு நேற்று சென்னையில் நடந்த பாலம் திறப்பு விழாவில் முதல்வர் கருணாநிதி கண்டனம் தெரிவித்தார். மத்திய அரசு உடனடியாக தலையிட்டு இந்திய இறையாண்மையைக் காக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும் ஓகனேக்கல் திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்றும் அவர் உறுதியாக தெரிவித்தார்.

இதையடுத்து கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர் இன்று பெங்களூரில் வன்முறையில் குதித்தனர். சேஷாத்ரிபுரம் பகுதியில் குவிந்த அவர்கள் அங்குள்ள நடராஜ் மற்றும் வினாயக் ஆகிய தியேட்டர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

இந்த தியேட்டர்களில் தமிழ்ப் படங்கள் திரையிடப்பட்டுள்ளன. தியேட்டர்களுக்குள் புகுந்த கும்பல் அங்கிருந்த கண்ணாடி ஷோ கேஸ்களை அடித்து உடைத்தனர். தியேட்டர் இருக்கைகளையும் கிழித்தெறிந்தனர்.

பின்னர் அருகில் உள்ள கடைகளுக்குள் புகுந்த அக்கும்பல் அங்கு தமிழர்கள் வைத்துள்ள கடைகளையும் தாக்கி சேதப்படுத்தி விட்டு தப்பிச் சென்றனர்.

இந்த சம்பவத்தால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது. சேஷாத்ரிபுரம் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும் போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

நன்றி:- தட்ஸ்தமிழ்

திருக்குறள் இன்று..

########################################
தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி.(1191)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம்:
தாம் விரும்பும் காதலர் தம்மையும் விரும்பும் பேறு பெற்றவர்கள்;
காதல் வாழ்வின் பயனாகிய விதையற்ற கனியை நுகரப்பெற்றவர்கள் ஆவார்.


Explanation:
One whose love is reciprocated by an altruistic love, is one;
Who got a full ripe, sweet fruit sans seed!!

P.S. While other settles for an unripe fruit and some others settle for half ripe fruit, satisfied with the Seed inside.

நண்பனின் காதலி..( 2 )

முதல் பாகம் படிக்க.. நண்பனின் காதலி..
வாழக்கை வழக்கம் போல ஒடிக்கொண்டிருக்க, பின்புல வேலைகள் நடந்து கொண்டிருந்த்து. அப்பெண்ணிண் வீட்டையும் கண்டுபிடித்துவிட்டான் நட்பு, என் கஷ்ட காலம் என் வீட்டிலிருந்து மூன்றாவது தெரு தாண்டிப்போனால் அவள் வீடு.....
ஒரு ஞாயிற்றுகிழமை, அப்போது வேறு டி.வி.எஸ் 50 பழகிய நேரம் தனியாக ஓட்டுவேன், டபுள்ஸ் என்பது கஷ்டம் தான். அவனை ஏற்றிக்கொண்டு, தெருக்களில் தெரு நாய்களையும், சில தாத்தாக்களையும் திகிலடித்துவிட்டு, ரோட்டை அளந்து ஒரு வழியாக அவள் வசிக்கும் தெருவிற்கு வந்து சேர்ந்தோம். ஒரு மூன்று முறை வீட்டை சுற்றியும் அவள் கண்ணுக்கு அகப்படவில்லை. என்ன விடாகண்டனுக்கு வந்த சோதனை என்று கவலையோடு யோசிக்கவும், “துணையில்லாதவருக்கு தெய்வமே துணை” என …..
பிள்ளையார் கோயிலுக்கு பஜனை பாட போய்விட்டோம்….

மீண்டும் சென்று ஒரு மூன்று சுற்று,........ ம்ஹம் !! வேலையாகவில்லை.
கடவுளே !! என்ன ஒரு சோதனை ....

கடைசி.. கடைசியாக... இன்னும் ஒரு மூன்று முறை. சரி என்று ஆரம்பித்தால்...

பிள்ளையார் அருளோ !! யதோசையாகவோ !! அவள் எங்கேயோ வெளியில் சென்று கொண்டிருந்தாள். ஹீரோவின் நண்பன் என்ற முறையில் டி.வி.எஸ் யை அவன் கையில் கொடுத்து அவள் முன் சென்று ஒரு ஒடி ஒடித்து படங்காட்ட கிளப்பிவிட்டேன்...
மிகவும் வெயிட்டாக வண்டியை கிளப்பி வேகமாக சென்றான்......
அந்தோ பரிதாபம் வண்டி அவளை கடக்கும் முன்னே நின்று போய்விட்டது, அவள் பறந்து போய் விட்டாள். இன்னும் வண்டியை கிளப்ப போராடிக் கொண்டிருந்தான் நண்பன்.

கல்லூரியின் கடைசிக்கட்டத்திலும் அவனாய் போய் சொல்லவில்லை. ஹட்ச் நாய் போல தன் பின்னால் அழைவதை கண்ட அந்த பெண், அவள் அப்பாவிடம் சொல்ல, அப்பா இவனை மிரட்ட. சோகத்தில் முடிந்தது அந்த ஒருதலை ராகம்.

சென்னையில் அந்த பெண்ணை சந்தித்த போது, என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு பேச, அவள் சென்னையிலேயே வேலை செய்வதாக கூறினாள். தன் அலுவலகத்திற்கு நேரமாவதாகவும் கூறி வேக வேகமாக சென்று விட்டாள்.

யோசித்து பார்க்கையில் வாழ்க்கை எதற்காகவும், யாருக்காகவும் கண்ணீர் சிந்தாமல் சென்றுகொண்டே இருக்கிறது... நண்பனின் புலம்பல்கள், சந்தேகங்கள், டி.வி.எஸ் பயணம் என்ற சுவடுகளை ஏற்படுத்தி போகிறது...
அப்பெண்ணை எங்கு பார்த்தாலும் நண்பனின் காதலி என்றே ஞாபகத்திற்கு வரும்...

திருக்குறள் இன்று..

########################################
யாதனின் யாதனின் நீங்கயான் நோதல்
அதனின் அதனின் இலன். (341)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம்:
எந்த எந்தப் பொருளில் ஆசைகொள்வதிலிருந்து ஒருவன் விடுபட்டவன் ஆகின்றானோ;
அந்த அந்தப் பொருளைக் குறித்து அவன் துன்பம் அடைவதில்லை.


Explanation:
If One leave his desire for a particular thing / Person;
He is liberated from the grief occurred by that object / Person.

நண்பனின் காதலி..

நான் எதிர்பார்க்காத நேரத்தில் அந்த சந்திப்பு நிகழ்ந்து விட்டது. சென்னையில் ஒரு நண்பனின் திருமணத்தில் அவர்களை சந்தித்தேன். ஒரே கல்லூரியில் படித்திருந்தாலும், வேறு துறை என்பதாலும், மேலும் நான் ஒரு ஹீரோ !! இல்லை என்பதாலும், என்னை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அது ஆரம்பித்தது கல்லூரியின் கடைசி ஆண்டுகளில். நானும் என் நண்பனும் ஒரே ப்ராஜக்ட் (தமிழில்?), 7 மணிவரை வேலை பார்த்துவிட்டு பேருந்தில் செல்வது வழக்கம்.

பொதுவாக பெண்கள் இல்லாமல் வறண்டு கிடக்கும் இயந்திரவியல் பறவைகள், பசுமையை தேடி EEE மற்றும் E & I போன்ற துறைகளை தினமும் நாடுவதுண்டு. இதைக்கூட “ பசங்க காணாமல் போகும் மர்மம்” 3ம் ஆண்டில் தான் என்னால் அறிய முடிந்தது. இக்கரையும் அக்கரையும் ஒவ்வொரு மூலையில் இருந்ததாலும், மேலும் அப்பொழுது நான் வயதுக்கு !! :-) வேறு வராத காரணத்தால் நான் போவதில்லை. இப்புனித யாத்திரையில் ஊடாக என் நண்பன் விழியில் விழுந்தவளை, இதயத்தில் இருத்திக்கொண்டான்.

7 மணி போருந்துக்கு வருகிறேன், சீக்கிரம் சென்று விடும் அந்த பெண் அன்று தாமதமாக போல அந்த போருந்தில் வந்தாள். அதுநாள் வரை அவன் பார்மங்கை (சைட் என்பதை எப்படி சொல்வதாம் ?) இருக்கிறாள் என்று யான்யறியேன். தூரத்தில் தெரிந்த சிங்கத்தை காட்டுவதை போல அப்பெண்ணை காட்டி,
“நண்பா! அவள நான் பாத்துட்டிருக்கேன் டா”

மூஞ்சி தெரியவில்லை என்று முன்சென்று நன்றாக பார்த்துவிட்டு வந்து
“சொல்லிட்டியா” என்றேன்
“இன்னும் இல்லடா”
“உன் கலருக்கு ஒத்துவருமாடா” (அவன் வெள்ளையாக இருப்பான்)
“இல்லடா பார்த உடனே அவதானு ஆயிருச்சுடா”

முன் இருக்கையில் அமர்ந்து வந்த அப்பெண்ணிண் அருகிலேயே குடிகொண்டான். ½ மணி நேர பயணத்தில் அவன் அங்கே ஒன்றிபோய்விட்டான். சீட்டு கிடைத்தும் உட்காராமல் எனக்கு கொடுத்துவிட்டான். ஜன்னலோர சீட்டிற்காக நேற்றுதான் என் காலை மிதித்து சென்றான் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். நானும் வழக்கம் போல தூங்கிக்கொண்டு வந்தேன்...
(தொடரும்..)

திருக்குறள் இன்று..

#############################################
கணைகொடிது யாழ்கொடு செவ்விதுஆங்கு அன்ன
வினைபடு பாலாற் கொளல்.(279)
- திருவள்ளுவர்
#############################################

விளக்கம்:
நேரானாலும் அம்பு கொடுமை செய்வது: வளைவானாலும் யாழ்க்கோடு இன்னிசை தருவது;
மனிதரையும் இப்படியே அவரவர் செயல்தன்மை நோக்கியே அறிதல் வேண்டும்.


Explanation:
A straight arrow will only harm, but a bend lyre will bring bliss by its melodies;
So One should judge people by their actions not by One’s looks.

இது என்ன வெட்டிவேலை !!

நீ கொஞ்சிய நாய்க்குட்டியின் காதோர தழும்பு,
உன் தம்பியின் தூக்க உளறல்,
எதிர்வீட்டிலிருந்து உன்னை நோக்குபவன்
என்று நம் பேச்சு நீள்கிறது.....

‘இது என்ன வெட்டிவேலை’ என்றொரு குரல் எழ....
எதையோ கேட்க நீ சிணுங்கிய சிணுங்களுக்காக,
உன் அலைபேசியாகவும் மாற தலைப்பட்ட
என்னுள், புதைந்துப்போனது அக்குரல்......

திருக்குறள் இன்று..

########################################
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்.(461)
                                               - திருவள்ளுவர்

#########################################

விளக்கம்:
ஒரு செயலைச் செய்வதற்கு முன்பாக, அதனால் முதலில் அழியக்கூடியதும்;
பின்னர் ஆகிவரக்கூடியதும், கிடைக்கும் மிச்சமும் கருதியபின்னரே செய்ய வேண்டும்.



Explanation:
Before doing a vocation, One should consider entities that are initially disintegrated;
the entities that are created, and entities that are remains at the end.


P.S. Entities may be time, effort, materials and even our thought.

திருக்குறள் இன்று..

########################################
தெய்வத்தா னாகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும். (619)
- திருவள்ளுவர்

#########################################

விளக்கம்:
தெய்வத்தின் அருளாலே கை கூடாது போனாலும், ஒருவனுடைய முயற்சியானது;
தன் உடல் வருத்தத்தின் கூலியைத் தப்பாமல் தந்து விடும்.



Explanation:
Even if God's grace not able to help One. Persistence from;
his part will pay the gratitude to him.

திருக்குறள் இன்று..

########################################
கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்
என்ன பயனும் இல.(1100)
- திருவள்ளுவர்

#########################################

விளக்கம்:
காதலுக்கு உரிய இருவருள் , ஒருவர் கண்ணோடு மற்றவர் கண்ணும் தம் நோக்கத்தால் ஒத்ததானால்;
அவர் வாய்ச் சொற்களால் எந்தப் பயனுமில்லை.



Explanation:
If the ogle of the lovers lock each other with their passion;
There is no need to speak it in words and it is futile.


P.S.: If eyes speak, what is purpose to let out in words?

திருக்குறள் இன்று..

########################################
பற்றற்ற கண்ணும் பழைமை பாராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே யுள. (521)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம்:
ஒருவன் வறுமையாளன் ஆகிய போதும், பழையபடியே அவனிடம் அன்பு பாராட்டுதல்;
என்பது சுற்றத்தார் இடம் மட்டுமே காணப்படும் தனி இயல்பாகும்.


Explanation:
Even if One become poor, his true Relatives will show;
Same warmth and Kindness to him.

திருக்குறள் இன்று..

########################################
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை.(53)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம் :
மனைவி சிறந்தவளாக இருந்தால் ஒருவனுக்கு எல்லாம் கிடைத்ததாகப் பொருள்;
அதேசமயம், மனைவி சரியில்லாதவளாக இருந்தால் அவனுக்கு எந்தச் சிறப்பு கிடைத்து என்ன பயன்?


Explanation:
If one’s spouse is extraordinary in thought and behavior, he got every thing in the world;
Contrary if his spouse is worse, what the use of all other excellent things in his life?

P.S.: Wife is life, so choose Wife / Husband wisely…..

திருக்குறள் இன்று..

#############################################
நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்னது உடைத்து.(1082)
- திருவள்ளுவர்
##############################################

விளக்கம் :
என்னை அவள் நோக்கினாள். நான் பார்க்க, என் பார்வைக்கு எதிராகவும் பார்த்தாள். அந்தப் பார்வை;
தானே தாக்கி வருத்தும் அம்பு மட்டுமின்றி, சேனையையும் கொண்டு தாக்குவது போல் உள்ளதே.


Explanation:
She saw me, as I reciprocate to her she confers a counter glance. That glance is like;
darts from an Army, whereas a single dart is ample for me to face.

ஜோதியும் !!! சுணங்கிய அ.தி.மு.க வும் !!!

சசிகலா, மற்றும் அவர் குடும்ப ஆதிக்கம் என்ற திரியை கொழுத்தி போட்டபடி அ.தி.மு.க வை விட்டு வெளியேறிவிட்டார் வக்கில் ஜோதி..

இது ஒன்றும் புதிய செய்தி என்றாலும், அ.தி.மு.க 10 வருடங்களாக வீரியம் குறைந்து காணப்படுவதற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

சமிபத்திய சர்சைகளான சிதம்பரம் வழிபாடு, ஆவின் பால் விலையுயர்வு, மின்சார பற்றாக்குறை போன்ற விசயங்களில் முறையான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க செயல்படவில்லை. கூட்டணியில் இருந்து கொண்டு பா.ம.க காட்டும் எதிர்ப்பில் அரையளவு கூட அ.தி.மு.க காட்டவில்லை.

எம்.பி தேர்தல் நெருங்கிவிட்டாலும், அ.தி.மு.க தன்னை தி.மு.க விற்கு தான் ஒரு சரியான மாற்று என்று சொல்ல தயங்கி நிற்கிறது. அ.தி.மு.க வின் எதிர்ப்புக் குரலாக ‘அம்மா’வின் அறிக்கை மட்டுமே முகங்காட்டி நிற்கிறது. 2ம், 3ம் கட்ட முகங்களின் குரலை கேட்க முடிவதில்லை.

இளைஞர்களின் ஓட்டுக்காக தி.மு.க வும் தே.மு.க வும் போட்டிபோட; பா.ம.க எதிர்க்கட்சியாக செயல்பட; வி. சிறுத்தைகள் போன்ற கட்சிகள் பிரிந்து விட; ம.தி.மு.க ஒதுங்கி நிற்க; அ.தி.மு.க எங்கே நிற்கிறது !!

அ.தி.மு.க தன்நிலை மாற்றி; வினையாற்றினால் தான் உருப்படமுடியும்...

திருக்குறள் இன்று..

#################################################
வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்
நுண்ணவை அஞ்சு பவர்க்கு. (725)
- திருவள்ளுவர்
################################################

விளக்கம்:
கோழைகளுக்கு கையில் வாள் இருந்தும் பயனில்லாதது போல;
அவையில் பேச அஞ்சுபவருக்கு பலநூல் கற்றும் பயனில்லை.


Explanation:
Like a coward having a sword;
A great amount of learnings will not help one who is afraid of assembly.

திருக்குறள் இன்று..

#############################################
உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள். (1106)
- திருவள்ளுவர்
#############################################

விளக்கம்:
மதிதான் அணைக்கும் போதெல்லாம், வாடிய என்னுயிர் தளிர்க்குமாறு தீண்டுதலால்;
இப் பேதையின் தோள்கள் அமிழ்தத்தால் அமைந்தவை போலும்.


Explanation:
Since, my exhausted soul is revived whenever I embrace my lover;
my lady’s shoulders should be made of Elixir.

தப்பி பிழைக்குமா ஹாக்கி..

பிஜிங் ஒலிம்பிக் போட்டிக்காக சிலியில் நடந்த தகுதி சுற்று போட்டியில் இந்திய அணி தோற்றது, இதன் மூலம், கடந்த 80 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக ஒலிம்பிக் வாய்ப்பு பறிபோனது.

1980துகளில் தொடங்கிய வீழச்சி முழுபரிமாணம் அடைந்து இன்று இந்தியாவிற்கு அவமானம் தேடி தந்துள்ளது. ஒரு காலத்தில், தயா சிங் ஆட்டத்தை பார்த்து, அவர் ஹாக்கி மட்டை வேதியல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அது போன்ற பொற்காலத்தை இழந்து இந்திய ஹாக்கி கற்காலத்தில் நிற்கிறது.

எந்த ஒரு Chak De வும் ஹாக்கியின் தரத்தை உயர்த்தவில்லை. காலங்காலமாய் வெற்றி பெற்ற இந்தியா, பாக்கிஸ்தான் அணிகள் Astro Turf என்கிற செயற்கை புல்வெளி ஆட்டம், புது யுக்திகள் போன்ற மாற்றங்களுக்கு ஈடு கொடுக்கவில்லை. இதன் மூலம் ஆஸ்தேர்லியா, நியுசிலாந்து, அர்ஜன்டீனா போன்ற அணிகள் முன்னிலைக்கு வந்துள்ளன. மேலும் இந்தியரசின் ஆதரவு குறைவு, கிரிக்கெட்டின் எழுச்சி போன்ற காரணங்களும் ஹாக்கிக்கு எதிராக செயல்பட்டன.

உடனே கிரிக்கெட் தான் எல்லாவற்றுக்கும் காரணம் ” என்று கூறுவதை விடுத்து, உண்மையை யோசிக்க வேண்டும். கிரிக்கெட்டிற்கும் அரசு ஆரம்ப காலங்களில் ஆதரவு தரவில்லை, இன்று பி.சி.சி.ஐ வளங்கொளிக்கும் நிறுவனமாயிருக்கிறது. கிரிகெட்டின் வருமானத்தை ஹாக்கி போன்ற மற்ற விளையாட்டிற்கு சில சதவீதங்களை ஒதுக்க வழிசெய்ய வேண்டும்.

சார்ல்ஸ்வொர்த் வருகிறார் பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.....

ம.தி.மு.க-வுக்கு ஆப்பு வைத்த விஜயகாந்த்..

ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட ‘சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி தடுத்த கதையா , அ.தி.மு.க சீட்டை ஒதுக்கினாலும் தே.மு.தி.க வின் வி.காந்த் ஆதரவு தர ஒத்துக்கொள்ளாததால், ம.தி.மு.க தேர்தலில் இருந்து விலகியது.
தே.மு.தி.க வும் ம.தி.மு.க வும் சென்ற தேர்தலில் மோதிக்கொண்டது ஞாபகம் இருக்கும் (சாதி ஓட்டு வேறு..). இப்போது சீட்டு என்றதும் தூது விடப்பட்டிருக்கிறது..

பேரம் படியவில்லை போல, விஜயகாந்த் ஆதரவு தர மறுக்க...
ம.தி.மு.க கலங்கி நிற்க....
வை.கோ ஆட்சி மன்ற (?) கூட்டத்தை கூட்டி !! கூட்டமாக மங்களம் பாடி முடித்து வைத்தார்...

விஜயகாந்த் : “தமில எனக்கு புடிக்காத ஒரே வார்த்த கூட்டணி... கூட்டணி... கூட்டணி...

வை.கோ : “பரட்ட !! ஆதரவ கொடு !! ஆத்தா வையும்.......

திருக்குறள் இன்று..

########################################
மதியும் மடந்தை முகனும் அறியா
பதியிற் கலங்கிய மீன். (1116)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம்:
மதிதான் யாதென்றும், இம் மடந்தையது முகந்தான் யாதென்றும் வேறுபாடு அறியாமையால்;
வானத்து மீன்கள் தம் நிலையில் நில்லாது கலங்கிப் போயினவே.


Explanation:
The Stars are perplexed and started blinking, as they are;
unable to differentiate between the Moon and her face.

திருக்குறள் இன்று..

########################################
வறியார்க்குஒன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து. (221)
- திருவள்ளுவர்

#########################################

விளக்கம்:
வறுமையானவர்க்கு ஒரு பொருளைத் தந்து உதவுவதே ஈகை;
பிறர்க்குத் தருவது எல்லாம் எதிர்ப் பயனை எதிர்பார்த்துத் தருவது ஆகும்.



Explanation:
Charity is one, where resources should be given to the deprived;
Else if one gives to others only because of the counter benefits not for Charity.



P.S. In Charity is one there is no way to expect help back.

திருக்குறள் இன்று..

########################################
வருகமற் கொண்கன் ஒருநாள் பருகுவன்
பைதல்நோய் எல்லாம் கெட. (1266)
- திருவள்ளுவர்

#########################################

விளக்கம்:
என் காதலன் ஒருநாள் மட்டும் என்னிடம் வருவானாக. வந்தால்;
என் துன்ப நோய் எல்லாம் தீரும்படியாக அவனோடு இன்பத்தை நானும் பருகுவேன்.



Explanation:
If my lover, who is estranged from me, comes back, I am desperate to;
imbibe all the pleasure with my love to end my “Malady of Severance”.

ஒத்தையில அலைய விட்ட..

ஒழுங்காதான் நான் இருந்தேன் இப்ப
ஒத்தையில அலைய விட்ட....
ஒத்தையடி பாதையிலே! மானம் சுட்டெரிக்குதம்
ஒருசமயத்திலே, மாமரநிழலுல மானபோல நின்னவ

கடந்து போக எட்டவெச்ச வேளையிலே
கண்நோரமா என்ன பார்த்த, அண்ணாச்சி
கடை கொசுறு போல. ஊருசனம்
கண்ணு வெச்ச ஆத்தா சுத்திபோடும்!
கண்ணு தெச்ச என்ன பண்ண?

கண்பேச்சு சொல்லாச்சு, சொல்லிப்புட்டேன்
காதலத்தான். காத்திருந்தேன் பதிலபாத்து
கட்டியணச்சு கட்டியம் சொல்லிபுட்ட!
கனவ என் நெஞ்சுல பத்திவிட்ட!

வெறுமானம் போல நானிருந்தேன்
வளர்பிறைய ஏத்திவெச்ச. முழுமதியா
வரமுன்னமே வேறெங்கோ வாக்கப்பட்ட
வார்த்த கெட்ட! என்ன அலையவிட்ட!

- மெய் புங்காடன்

திருக்குறள் இன்று..

Thirukkural For the Day

########################################
தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து. (561)
- திருவள்ளுவர்

#########################################

விளக்கம்:
ஒருவனுடைய குற்றத்தைத் தகுந்த வழிகளாகவே ஆராய்ந்து, மீளவும் அதைச் செய்யாதபடி;
குற்றத்திற்குத் தகுந்தபடி தண்டிப்பதே வேந்தன் கடமையாகும்.


Explanation:
The deed of the Judge is to investigate the crime in proper way;
and provide the punishment for the crime so that the accused will not commit it again.

திருக்குறள் இன்று..

########################################
விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு. (1186)
- திருவள்ளுவர்

#########################################

விளக்கம்:
விளக்கின் முடிவை எதிர்பார்த்துத் தான் வரக்காத்திருக்கும் இருளைப் போல;
என் தலைவனுடைய தழுவலின் முடிவைப் பசலையும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது.



Explanation:
Like the darkness waiting for the end of the light in the lamp;
the malady of severance is waiting for the end of embrace of my lover.

திருக்குறள் இன்று..

########################################
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன். (605)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம்:
சோம்பல், எதையும் தாமதமாகவே செய்தல், மறதி, தூக்கம், என்னும் நான்கும்;
தாம் அழிந்து விடக் கருதும் தன்மை கொண்டவர்கள், விரும்பி ஏறும் கப்பல்களாம்.



Explanation:
Sluggishness, Procrastination, Forgetfulness and Slumber are the four Ships;
which the people, who want to destroy themselves will ride.

திருக்குறள் இன்று..

########################################
பண்டறியேன் கூற்றென் பதனை இனிஅறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு. (1083)
- திருவள்ளுவர்

#########################################

விளக்கம்:
"கூற்று" என்பதை இதன்முன்னர் அறியேன், இப்போது அறிந்து விட்டேன். அது;
அழகிய பெண்ணின் வடிவோடு பெரியவாய் அமர்த்த கண்களையும் உடையது.



Explanation:
I don’t know how “Death” will look like. But now I fully understand that;
It comes in the form of beautiful lass with immense eyes.

சிற்றம்பல மேடையில் தமிழ் (ஏற்றம் !!) இறக்கம் !!

சிற்றம்பல மேடையில் தமிழ் ஏற்றம் !! இறக்கம் !!

சட்டம் போட்டாயிற்று !!
ஆணையர் ஆணையும் உண்டு !!
இருந்தும் ......
தேவாரம் பாடி தமிழை சிற்றம்பலத்தில் ஏற்றி விட வந்த ஆ.சாமி அடிப்பட்டு வந்திருக்கிறார்.
அரசு கணக்குக்காட்டிருக்கிறது, தமிழ் பாடப்பட்டதென்று !!
கடவுளை பார்க்கமுடியாமல், தடுத்து நின்ற தீட்சிதர்களை பார்த்து தமிழ் பாடப்பட்டது !!

இந்தகூத்துக்கள் ஒருபுறமிருக்க, எல்லோரும் சென்றபின் என்ன நடந்திருக்கும் ?
தமிழ் பாடப்பெற்ற இடமெல்லாம் தண்ணீரும் பாலுமாய் கழுவி தீட்டு கழிக்கப்பட்டிருக்கும்.
“நீச பாக்ஷை” கேட்டுவிட்ட (?) (தீட்சிதர்களுடைய கூச்சலை மீறி) கடவுளுருவுக்கு சந்தனம், இளநீர், பால் கொண்டு பாவம் போக்கப்பட்டிருக்கும்.

தமிழுக்கு ஒரு அவமாணம் !!
தமிழின துரோகிகளை பூண்டோடு ஒழிக்கவேண்டும் !!
அந்த கூட்டத்தின் வால் நறுக்கப்பட வேண்டும் !!
என்று கன்னம் துடிக்க உணர்ச்சிவசப்படுவதை விட……..

யோசிக்கணும்…..

உணர்ச்சிவசப்பட்டு, ஒரு மொழியை எதிர்த்து வேற மொழி வந்தது போல ஆக கூடாது.

தமிழிலே பாடறது சட்டபூர்வமாகனும், சட்டத்தை எதிர்த்தா என்ன ஆகும்முனு தெரியவெக்கனும்!
‘இருக்கறவன் தர மாட்டான்
பசிச்சவன் விட மாட்டான்’ கிற கதையாகனும்.
கடவுளை நம்பரமோ! இல்லையோ! தமிழுக்கான உரிமையை பெற துணை செய்யனும்!

இந்த உலகம் மாயைனு சொல்றவுங்க, இந்த அற்க உடலோடு அழிஞ்சு போற (தேவ) மொழியை பத்தி ஏன் இவ்வளவு கவல படனும்?
நந்தனார் மோட்சம் (?) ரொம்ப ரொம்ப பழைய கதை! (எல்லாருக்கும் அது கதையினு தெரியும்). பொற்காலத்த பரண் மேல போட்டுட்டு நிகழ்காலத்துக்கு வாங்க!!

திருக்குறள் இன்று…

########################################
உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல். (949)
- திருவள்ளுவர்
#########################################

விளக்கம்:
மருத்துவத்தைக் கற்றறிந்தவன்,

• நோயாளியின் சக்தியையும்,
• நோயின் தன்மையையும்,
• காலத்தின் இயல்பையும்,

நன்கு கருதிப் பார்த்தே சிகிச்சை செய்ய வேண்டும்.


Explanation:
A good Physician should look,

• Patient’s strength
• Character of the Disease
• Time frame

and research about it before giving treatment.

தேடல்...

நான் வாழ்க்கையை தேடுகிறேன்!

நதியில், வனத்தில், மக்களிடம்

நான் வாழ்க்கையை தேடுகிறேன்!
கனவு வெளியில் மிதந்துகொண்டே

ஆனால்..
அது மெதுவாக தேய்கிறது, காட்டில்
தொலைந்த ஒத்தையடி பாதைபோல

ஆசை என்னும் சக்கரம் கட்டி
ஓட்டமாய் ஓடுகிறேன், தூரபச்சை
பார்த்துக்கொண்டே சுற்றம் தெரியா
குருடனாய் ஓடுகிறேன்!
பௌர்ணமியின் நினைவிலேயே,
மூன்றாம் பிறையை மறந்துநிற்கிறேன்

ஓட்டத்தை நிறுத்திவைத்த அந்த ஊர்புரத்தின்
ஓங்கிய புளியமரத்தின்........... புத்தனானேன்கண் திறந்துவிட்டது....
மாளிகை கனவை சுவரோரமாய் சாய்த்துவைத்து
ஓரரைசன்னலில் மழைரசிக்க பழகுகிறேன்,
கடல்தான் கனவென்றாலும், ஓடியவழியெல்லாம்
கரை சிறந்த பாய்கின்ற நதியாக

- மெய் புங்காடன்

திருக்குறள் இன்று…

########################################
கரவாது உவந்தீயுங் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி யுறும். (1061)
- திருவள்ளுவர்

#########################################

விளக்கம்:
தம்மிடம் உள்ள பொருளை ஒளிக்காமல் உவப்போடு கொடுத்துதவும் கண் போன்றவரிடமும் சென்று இரந்து நிற்காமல்;
வறுமையைத் தாங்குதல் கோடி நன்மை தருவதாகும்.



Explanation:
It would be better if you tolerate the deprivation, than to plead to the one who;
bestows, without concealing all the wealth with bliss.


P.S. He is like “Eye”; one should stand with dignity and not fall to plead.

திருக்குறள் இன்று…

#######################################
நனவென ஒன்றில்லை யாயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன். (1216)
- திருவள்ளுவர்

########################################

விளக்கம்:
நனவு என்று சொல்லப்படும் ஒன்று இல்லையானால், கனவில் வருகின்ற நம் காதலர்;
நம்மை விட்டு எப்போதுமே பிரியாதிருப்பார் அல்லவோ.


Explanation:
There should be no reality, so that my lover will not be estranged from me;
And I will inseparable with my love in the Dream land forever.


P.S. Dreaming about “SECOND LIFE” (Calvin Asks :-| => if reality is not there then how come Dream will come?)

என் இனிய சுஜாதா.....

சுஜாதா....
கணேஷ் - வசந்தில் ஈர்த்துக்கொண்டு....
விகடன் பக்கங்களில் தொழில்நுட்பமும், தமிழும், நாட்டு நடப்பும் கலந்து தந்து...
என் உலகம் விரிய அவர் ஒரு காரணம்.
புலமையை காட்ட வேண்டும் என்றில்லாமல் சாமானிய தமிழனும் படிக்கும் வகையில் எழுதியவர்....
ஓப்பன் சோர்ஸ் ஆதரவாளர்......
எதை எடுத்தாலும் வேத பெருமையுடனும், 'முன்னரே சொல்லப்பட்டது' எனும் வகையில் எழுதுவதை தவிர......
அவர் ஒரு பண்முகவாதி... கதை, கவிதை, கட்டுரை, இணையத்தமிழ், திரைவசனம், தொழில்நுட்பம் , மற்றும் பல...
சாமானிய தமிழனை அடுத்த தளத்திற்கு அழைத்துச்செல்லும் ஒரு வழிக்காட்டியை தமிழ் இழந்திருக்கிறது.....
என் இனிய சுஜாதா..... கடவுள் உண்டா இல்லையா என்று அங்கிருந்து எழுதுங்கள்.

திருக்குறள் இன்று…

########################################

வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை. (512)

- திருவள்ளுவர்

#########################################


விளக்கம்:
செல்வம் வருவதற்குரிய வழிகளைப் பெருகச் செய்து, அதனால் தன்னை வளமைப் படுத்திக்கொண்டு;
மேலும் தகுந்தவற்றை ஆராய்பவனே செயலைச் செய்வானாக
.

Explanation:

Allot a work to someone who will,

• Increase the ways for acquiring wealth for the company
• Thereby increase his fortune
• And make research to find out the ways for assets attainment.

திருக்குறள் இன்று…

########################################
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு. (110)
- திருவள்ளுவர்

#########################################

விளக்கம்:
எந்ந நன்மையை அழித்தவர்க்கும் தப்புதற்கு வழி உண்டாகும்;
ஆயின், ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வே கிடையாது.



Explanation:
There is a chance to survive, even if you destroy any other good things;
But not if you don’t recognize and reciprocate the aid provided.

அந்த பார்வை...

அந்த பார்வைக்கு பொருள் என்ன?
விலக்கி போயிருக்கலாம் உன்கண்கள்
விட்டிருப்பேன் சம்மதமில்லை என்று
நிலைத்து சிலநொடிகள் பார்த்துவிட்டாய்


நெஞ்சத்தின் மையத்தில் வெடித்துகிளம்பி
மெய்யெல்லாம் பரவியது ஓர்அதிர்வு
ஒளிவெள்ளத்தில் வெளிரிநிற்க்கும் முயல்போல
உன் பார்வை தேடி பித்தனானேன்

- மெய் புங்காடன்

திருக்குறள் இன்று…

########################################
கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லெ இடம். (1123)
- திருவள்ளுவர்

#########################################

விளக்கம்:
கண்ணின் கருமணியில் உள்ள பாவையே! நீயும் போய் விடுவாயாக!
யாம் விரும்புகின்ற அழகிய நுதலை உடையாளுக்கு இருப்பதற்கான இடம் வேறு இல்லை.



Explanation:
Oh! Pupil of my eyes! You must leave!
I need an abode for my love, to stay.

தனித்திரு! விழித்திரு!

நான் அவளை பார்த்தேன்!
புதிரோ ரகசியமோ அந்தமுகத்தில்
புதிரை படித்தேன் புரியவில்லை
படித்தேன் மீண்டும் மீண்டும்!

விடை கிடைக்க காத்திருந்தேன்.....
கடந்துபோன அக்கடைசி தருணத்தில்..
கடைக்கண் காட்டிவிட்டாய்!

அம்மணித்துளி....................
நான் அவளை பார்த்தேன்
அவள் என்னை பார்த்தாள்
சொர்க்கம் என்னை பார்த்தது!

பேச துடிக்கிறேன்! பக்கமிருக்க விழைகிறேன்!
தனியே வருவாய்என நான்நிற்க,
தோழியரோடு கூடி நிற்கிறாய்!

என் வானவில்லில் மூன்றே நிறங்கள்
பச்சை, சாம்பல், வெளிர் சிவப்பு
உன் ஆடைகள்! என் வண்ணங்கள்!
உன் அசைவுகள்! என் காவியங்கள்!


என்னை ஏன் பாடாய் படுத்துகிறாய்
பதிலை எண்ணி மறுங்குவதை விடுத்து
கேள்வி கேட்பதே இங்கே கேள்விகுறி!
ஆம்என்றால் நான் இறைக்குநிகர்
இல்லை என்றால்.................

ஒரேநிமிடம் பெண்ணே! ஒரேநிமிடம்!
தனித்திருக்க மாட்டாயா? என் தவிப்பை,
புரிந்திருக்க மாட்டாயா?

இதயம் இரஞ்சுகிறது, அறிவு தவிக்கிறது
பெண்ணே புரிந்துகொள்!
தனித்திரு! விழித்திரு! என்கிறான் பாரதி
பெண்ணே புரிந்துகொள்!

- மெய் புங்காடன்

திருக்குறள் இன்று…

####################################
காலாழ் களரின் நரியடுங் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு. (500)
- திருவள்ளுவர்

####################################

விளக்கம்:
போர்க்களத்தில் வேலேந்திய வீரரையும் கோத்து எடுத்த கொம்புடைய அஞ்சாத களிற்றையும்;
அதன் கால் ஆழ்கின்ற சேற்று நிலத்தில், சிறுநரிகள் கொன்றுவிடும்.



Explanation:
An Elephant which stabs countless people in the Warfield, will be killed;
by a bevy of Jackals if it get caught in the Marshland.


P.S. Think about the field before you play, irrespective of your attitude

திருக்குறள் இன்று…

###################################
சென்ற இடத்தால் செலவிடாது தீதுஒரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு. (422)
- திருவள்ளுவர்

####################################

விளக்கம்:
மனத்தை அது சென்ற இடங்களிலேயே செல்லவிடாமல், தீமைகளிலிருந்து விலக்கி;
நன்மையில் மட்டுமே செல்ல விடுவது அறிவு ஆகும்.



Explanation:
Knowledge is the one which prevents us from falling into wrong path;
thereby guides us in the correct way.

திருக்குறள் இன்று…

####################################
அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர். (997)
- திருவள்ளுவர்
#####################################

விளக்கம்:
நன்மக்களுக்கு உரிய பண்பு இல்லாதவர்கள், அரத்தைப் போலக் கூர்மை உடையவர் என்றாலும்;
ஓரறிவேயுள்ள மரத்தைப் போன்றவர்கள் ஆவர்.


Explanation:
One who doesn’t have good cultured habits, even though they are sharp as Saw;
Is equivalent to single sensed tree.

P.S. Human are suppose to have Six senses