என் மூன்று தவறுகள் - சந்திரிகா குமாரதுங்கா

சந்திரிகா குமாரதுங்கா 9 ஆண்டுகள் அந்நாட்டின் அதிபராக இருந்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில் அரசியல் வாழ்க்கையில் தான் செய்த 3 குற்றங்கள் குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். அவற்றை பட்டியலிட்டும் கூறியுள்ளார்.

1. புலிகளுடன் அமைதி பேச்சு வார்த்தை மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஆட்சியை 2004ம் ஆண்டு கலைத்தது.

2. சிங்கள தீவிரவாத கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனாவுடன் தனது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டணி வைத்தது.

3. காலம் வரும்போது தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

முதல் தவறு காரணமாக அமைதிக்கான ஒரு நூலிலை வாய்ப்பும் பறிபோனது.. ரணிலும் சிங்கள அரசியல் தலைவராக நடந்தாலும். அமைதியை நோக்கி ஒரிரண்டு அடிகள் அவர் நடந்தார், என்பது சந்தேகமில்லை.

அரசியல் வெளிச்சத்தில் இல்லாத சந்திரிகாவும், நடுமேடைக்கு வரும் ஒரு முயற்சியாகவே இதை கூறுகிறார். இதில் கடைசியில் நசுக்கப்படுவது இலங்கை மக்களே!! எங்கே அமைதியோ.. அங்கே வளர்ச்சி..

0 மறுமொழிகள்: