காப்பி குடிச்சிருப்போம்.. இது காப்பி அடிக்கறத பத்தி..

நாங்கெல்லாம் காப்பியடிசிருக்கறோம்!! ஆங்கிலமுனா is was மாத்திப்போட்டு, கணக்குனா x அ y யாகவும்; y யை z டாகவும் மாத்திப்போட்டு ஒழுங்கா எழுதரவனை கடுப்பேத்தி நல்ல மதிப்பெண்ணையும் வாங்கி வக்கனையா சிரிச்சிருக்கோம்...

ஆனா, அது அதுக்கு ஒரு முறையிருக்கு.....

காப்பியடிச்சேனு தெரியாத அளவுக்கு காப்பியடிக்கனும்!! இயற்பியல், வேதியல கதய படிச்சிட்டு நம்ம நடையில எழுதனும், சமன்பாடு – முறைப்பாடுங்கற வெங்காயமெல்லாம் அப்படியே எழுத வேண்டியதுதான்.
கணக்கும் இரண்டு வரி கூட குறைய எழுத வேண்டியதுதான். வரலாறுனா நாளு, பேரு தவிற பிற எல்லாத்தையும் நம்ம எழுதிக்கலாம். விலங்கியல், தாவரவியல் னா படம் முக்கியம், பிற எல்லாம் நம்ம வசதிய பொருத்து. மொழி பாடத்துல கவிதை, இலக்கணம் முக்கியம்.


இதுக்கிடையில ஜெ! சொல்லற மாதிரி ஒரு குட்டி கத!!

ஒரு ஊருல, ஒரு ஈ இருந்துச்சாம் அதோட தோஸ்து செத்து போச்சு, சோகம் தாங்காம டெட் பாடிய சுத்தி சுத்தி வந்துச்சு. அது ஒரு விபத்து, தாள் திருப்பும் போது நண்பன் தாளுக்கிடையில மாட்டிக்கிட்டான். ரமேசுங்கர மனுசன பய (முள்ளம்பன்னினு கூப்புடுவாங்கன்றது ஒரு பக்கம் இருக்கட்டும்) எழுத கைய தாள் மேல வெச்சான், நன்பன் சட்னி ஆயிட்டான். சோகத்தில இருக்கற இரண்டாம் ஈ ய... ரமேச காப்பியடிச்சி எழுதர மக்கி பய புடுச்சு மொத ஈ செத்த மாதிரி தாளுல வெச்சு பத்தரம் பண்ணிட்டான்.

அந்த ஈங்க செத்தாலும் அதோட பேரு நிலச்சிருக்கும், அதாங்க நாம சொல்லுவமில்ல ‘ஈயடிச்சாங் காப்பி’.


இந்த பதிவ எழுத ஆரம்பிச்சதுக்கு காரணம் ‘சந்தோஷ் சுப்பரமணியம்’ படம் பாத்த்துதான்..
ஏமண்டி பூமில இருந்த்தால ஒரிஜனல் ‘பொம்மரில்லு’ பாத்திருக்கேன்.. ‘ஈயடிச்சாங் காப்பி’யா இருக்கும் ‘சந்தோஷ் சுப்பரமணியம்’ பாத்திட்டுதான் இந்த பதிவு. படம் வைச்சு நல்லா தெரியுனுமுனா, இங்க போங்க….

1 மறுமொழிகள்:

கிஷோர் said...

ஹா ஹா ஹா

தெலுங்குல ஒரு முறை படம் பார்த்துடுங்க. சித்தார்த்தோட பாடி லேங்குவேஜ் கூட காபி அடிச்சிருப்பானுங்க.