சங்க இலக்கியம் இன்று..

படைப்புப் பல படைத்துப் பலரோடு உண்ணும்
   உடைப்பெருஞ் செல்வராயினும் இடைப்படக்
குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
   இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதுர்த்தும்
   மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லை தாம்வாழும் நாளே!
                   - பிசிராந்தையார்

விளக்கம்
:
"எலாச் செல்வங்களையும் பெற்று செல்வனாக இருந்து பயனில்லை! பலரோடு விருந்துண்டு உறவாடுதலில் பயனில்லை! வீட்டில் இங்கும் அங்குமாக நடைபயிலும் குழந்தை கையை நீட்டும்; கலத்துணவை தரையில் தள்ளும். பிசைந்து வாயிலிட்டு,நெய்யுணவை உடலில் படுமாறு சிதறிவிடும். இவ்வாறு சிறுகுறும்பு செய்யும் மக்களை இல்லாதவர்க்கு வாழ்நாள் பயனற்றது,வீடு பேறும் இல்லையாம்". பாண்டியன் அறிவுடை நம்பியிடம் சென்ற பிசிராந்தையார் அரசன் சிறப்படைய இப்பாடல் வரிகளினைப் பாடினார்.

Explanation:
It is not enough; even he has all the Wealth and is a great Business magnet. His life is useless if there is no infant in his home, who will roam around spreading his little hands; to catch, to bite, and to spoil the order; and will throw the food on the floor; thus giving us coziness by performing small mischief;

P.S. This is poem is sung by Pisir-anthai-yaar at the court of Pandian King Ari-vudai Nambi. In the Sangam age (2400 years ago)

1 மறுமொழிகள்:

முனைவர் இரா.குணசீலன் said...

மிகவும் நன்றாக உள்ளது தொடர்ந்து எழுதவும் வாழ்த்துக்கள்..............