தேடல்...

நான் வாழ்க்கையை தேடுகிறேன்!

நதியில், வனத்தில், மக்களிடம்

நான் வாழ்க்கையை தேடுகிறேன்!
கனவு வெளியில் மிதந்துகொண்டே

ஆனால்..
அது மெதுவாக தேய்கிறது, காட்டில்
தொலைந்த ஒத்தையடி பாதைபோல

ஆசை என்னும் சக்கரம் கட்டி
ஓட்டமாய் ஓடுகிறேன், தூரபச்சை
பார்த்துக்கொண்டே சுற்றம் தெரியா
குருடனாய் ஓடுகிறேன்!
பௌர்ணமியின் நினைவிலேயே,
மூன்றாம் பிறையை மறந்துநிற்கிறேன்

ஓட்டத்தை நிறுத்திவைத்த அந்த ஊர்புரத்தின்
ஓங்கிய புளியமரத்தின்........... புத்தனானேன்கண் திறந்துவிட்டது....
மாளிகை கனவை சுவரோரமாய் சாய்த்துவைத்து
ஓரரைசன்னலில் மழைரசிக்க பழகுகிறேன்,
கடல்தான் கனவென்றாலும், ஓடியவழியெல்லாம்
கரை சிறந்த பாய்கின்ற நதியாக

- மெய் புங்காடன்

0 மறுமொழிகள்: