சிற்றம்பல மேடையில் தமிழ் (ஏற்றம் !!) இறக்கம் !!

சிற்றம்பல மேடையில் தமிழ் ஏற்றம் !! இறக்கம் !!

சட்டம் போட்டாயிற்று !!
ஆணையர் ஆணையும் உண்டு !!
இருந்தும் ......
தேவாரம் பாடி தமிழை சிற்றம்பலத்தில் ஏற்றி விட வந்த ஆ.சாமி அடிப்பட்டு வந்திருக்கிறார்.
அரசு கணக்குக்காட்டிருக்கிறது, தமிழ் பாடப்பட்டதென்று !!
கடவுளை பார்க்கமுடியாமல், தடுத்து நின்ற தீட்சிதர்களை பார்த்து தமிழ் பாடப்பட்டது !!

இந்தகூத்துக்கள் ஒருபுறமிருக்க, எல்லோரும் சென்றபின் என்ன நடந்திருக்கும் ?
தமிழ் பாடப்பெற்ற இடமெல்லாம் தண்ணீரும் பாலுமாய் கழுவி தீட்டு கழிக்கப்பட்டிருக்கும்.
“நீச பாக்ஷை” கேட்டுவிட்ட (?) (தீட்சிதர்களுடைய கூச்சலை மீறி) கடவுளுருவுக்கு சந்தனம், இளநீர், பால் கொண்டு பாவம் போக்கப்பட்டிருக்கும்.

தமிழுக்கு ஒரு அவமாணம் !!
தமிழின துரோகிகளை பூண்டோடு ஒழிக்கவேண்டும் !!
அந்த கூட்டத்தின் வால் நறுக்கப்பட வேண்டும் !!
என்று கன்னம் துடிக்க உணர்ச்சிவசப்படுவதை விட……..

யோசிக்கணும்…..

உணர்ச்சிவசப்பட்டு, ஒரு மொழியை எதிர்த்து வேற மொழி வந்தது போல ஆக கூடாது.

தமிழிலே பாடறது சட்டபூர்வமாகனும், சட்டத்தை எதிர்த்தா என்ன ஆகும்முனு தெரியவெக்கனும்!
‘இருக்கறவன் தர மாட்டான்
பசிச்சவன் விட மாட்டான்’ கிற கதையாகனும்.
கடவுளை நம்பரமோ! இல்லையோ! தமிழுக்கான உரிமையை பெற துணை செய்யனும்!

இந்த உலகம் மாயைனு சொல்றவுங்க, இந்த அற்க உடலோடு அழிஞ்சு போற (தேவ) மொழியை பத்தி ஏன் இவ்வளவு கவல படனும்?
நந்தனார் மோட்சம் (?) ரொம்ப ரொம்ப பழைய கதை! (எல்லாருக்கும் அது கதையினு தெரியும்). பொற்காலத்த பரண் மேல போட்டுட்டு நிகழ்காலத்துக்கு வாங்க!!

2 மறுமொழிகள்:

Anonymous said...

//
இந்த உலகம் மாயைனு சொல்றவுங்க, இந்த அற்க உடலோடு அழிஞ்சு போற (தேவ) மொழியை பத்தி ஏன் இவ்வளவு கவல படனும்?
நந்தனார் மோட்சம் (?) ரொம்ப ரொம்ப பழைய கதை! (எல்லாருக்கும் அது கதையினு தெரியும்). பொற்காலத்த பரண் மேல போட்டுட்டு நிகழ்காலத்துக்கு வாங்க!!
//

கலக்கல்..!!!!!!!!

மெய் புங்காடன் said...

nandri...