ஒத்தையில அலைய விட்ட..

ஒழுங்காதான் நான் இருந்தேன் இப்ப
ஒத்தையில அலைய விட்ட....
ஒத்தையடி பாதையிலே! மானம் சுட்டெரிக்குதம்
ஒருசமயத்திலே, மாமரநிழலுல மானபோல நின்னவ

கடந்து போக எட்டவெச்ச வேளையிலே
கண்நோரமா என்ன பார்த்த, அண்ணாச்சி
கடை கொசுறு போல. ஊருசனம்
கண்ணு வெச்ச ஆத்தா சுத்திபோடும்!
கண்ணு தெச்ச என்ன பண்ண?

கண்பேச்சு சொல்லாச்சு, சொல்லிப்புட்டேன்
காதலத்தான். காத்திருந்தேன் பதிலபாத்து
கட்டியணச்சு கட்டியம் சொல்லிபுட்ட!
கனவ என் நெஞ்சுல பத்திவிட்ட!

வெறுமானம் போல நானிருந்தேன்
வளர்பிறைய ஏத்திவெச்ச. முழுமதியா
வரமுன்னமே வேறெங்கோ வாக்கப்பட்ட
வார்த்த கெட்ட! என்ன அலையவிட்ட!

- மெய் புங்காடன்

0 மறுமொழிகள்: